பாவம் ரியாவிற்கு ஒன்றுமே விளங்க வில்லை. புரிந்தவளோ வெட்கத்தில் நிலம் நோக்கினாள். ஹ்ம்ம் போதும் போதும் உன் லொள்ளு ஜொள்ளு ரெண்டுமே தங்க முடில ப்ரோ வந்து கார்ல ஏறு என்று இழுத்தான் சக்தி.அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினர் சரவணன் குடும்பத்தார். சஹி அலங்காரங்களை கலைத்து படுக்கையில் விழுந்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
இதயம் இடம் மாறியதே
விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று
அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும் அழகாய்
மாறி போனதேனோ
மனமே மனமே உனக்குள் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடு மாற்றம்
உனக்குள் நடந்தது சொல்வாயா
மனமே மனமே உனக்குள் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்குள் நடந்தது சொல்வாயா
சென்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
புதுஉலகம் பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்த்ததோ
இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
தொடரும்
Next episode will be published on 26th Sep. This series is updated fortnightly on Wednesday ANs.
{kunena_discuss:1208}