“சீ .. இப்படி பட்டவனிடமா நான் மயங்கி நின்றேன்.. சரியான வுமனிஷ்ட்.. முதலில் வேற ஒரு அறைக்கு போய்டனும்..அவன் அறையில் நிம்மதியா இனிமேல் தூங்க கூட முடியாது.. இனிமேல் அவன் இருக்கிற பக்கம் கூட திரும்ப கூடாது...” என்ற உறுதியோடு அவனின் வருகைக்காக காத்திருந்தாள்..
அன்று இரவு மிகவும் கழைத்து போய் வந்திருந்தான் ஆதித்யா.. புதிதாக ஆரம்பித்து இருந்த ப்ராஜெக்ட்டிற்காக பல மீட்டிங்கள் அட்டென்ட் பண்ண வேண்டியும் நிறைய பேரை சமாளிக்க வேண்டியும் இருந்தது... வீட்டிற்குள் வந்தவன் பவித்ராவை தேடினான்..அவள் வரவேற்பறையில் இல்லை.. நேராக அவன் ரூமுக்கு வந்தவன் அங்கும் அவள் இல்லாததால் எங்க போய்ட்டா?? என்று நினைத்து கொண்டே ரிப்ரெஷ் ஆகி கீழ வந்தான்.. டைனிங் ஹாலிலும் அவள் இல்லை..
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்கு தான் தூங்கினாள்.. அவன் சொன்ன மாதிரி எதுவும் முயற்சிக்கலையே..அதனால எதுவும் செய்ய மாட்டான் என்று தன்னை தானே தேற்றி கொண்டு நைட்டிக்கு மாறினாள்
ஆதித்யா கட்டிலில் அமர்ந்து மொபைலை நோண்டி கொண்டிருந்தான்...
பவித்ரா கதவை திறந்துகொண்டு வரவும் எதேச்சையாக அவன் கண்கள் அங்கு சென்றன..