சரண்யா அதிர்ந்து போய் பார்க்க,
“பழசையே நினைச்சிட்டு இருந்தா நிகழ் காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் அர்த்தமே இல்லாம போயிடும் சரண்யா... இனி நீ உன்னை பத்தியும் நிஷாவை பத்தியும் யோசிக்குறது தான் சரி...”
சரண்யாவால் நளினி சொன்னதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை... மறுக்கவும் மனம் வரவில்லை... எனவே அமைதியாக நின்றாள்.
நளினியே தொடர்ந்து பேசினாள்.
“அவர் காருல வந்தாரு... நீ மறந்துட்டேன்னு உன்னை திட்டினாரு, போயிட்டாரு... அவரோ அவர் கூட வந்தவங்களோ நிஷாவை பத்தி ஒரு வார்த்தையாவது கேட்டாங்களா?? தனியா நீ குழந்தையோட கஷ்டப்பட்டப்போ யாராவது என்னனாவது கேட்டாங்களா?”
“ஆனாலும்...”
“இல்லை சரண்யா இவரை மாதிரி இருக்குறவங்க எல்லாம் எப்போடா நமக்கு சான்ஸ் கிடைக்கும் இவங்களை திட்டலாம், கேலி செய்யலாம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றவில்லை..
எனவே அவன் சொன்னதற்கு சம்மந்தமே இல்லாமல்,
“கம்பெனி எப்படி போகுது சார்...?” என்றுக் கேட்டாள்.
“கம்பெனியை கவனிக்காம இப்படி ரோட்டுல வந்து நிக்குறீயேன்னு கேட்குறீயா... அதெல்லாம் நம்ம சேகர் சார் பார்த்துப்பார்.. அவருக்கு எக்ஸ்ட்ரா பொறுப்புகள் கொடுத்திருக்கேன்...”