“ஓ...”
“ஆனாலும் அநியாயத்துக்கு என்னை சார்ன்னு இப்போவும் கூப்பிடுறீயே... நல்லா இல்லை சரண்...”
சரண்யா பதில் சொல்லும் முன்,
“ஹேய் மித்து...” என்ற குரல் அவர்கள் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அங்கே, ஜவுளிக் கடையில் வைக்கப் பட்டிருக்கும் பொம்மை போல முழு மேக்கப்புடன் அதி நாகரீக பெண் ஒருத்தி நின்றிருந்தாள்....
அழகாக... மிகவும் அழகாக இருந்தாள்.... ஆனாலும் ஏனோ சரண்யாவிற்கு அவளை பிடிக்கவில்லை...
“என்னடா ஒன்னும் சொல்லாம பார்த்துட்டே இருக்க...?”
அந்த பெண் அடுத்த கேள்வியை கேட்ட போது தான், தன்னுடைய பக்கத்தில் நின்றிருந்த மித்ரன் விறைத்து போய் நிற்பது சரண்யாவிற்கு புரிந்தது.
அதுவே, அவள் யாராக இருக்கும் என்பதையும் சரண்யாவிற்கு எடுத்து சொன்னது...
இவள் தானா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் உள் மனதில் இருந்து வந்தவை என்று சரண்யாவிற்கு புரிந்தது....
அதிலும் அவனின் ‘உனக்காக எப்போவும் நான் இருப்பேன்’ அவளின் மனதில் ஆழ பதிந்தது...
அதற்கு மேல் அதிகமாக பேசாமல் இருவரும் அமைதியாகவே நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள்...