(Reading time: 12 - 23 minutes)

இதற்குப் பிறகு ஷ்யாமிற்கு மித்ராவிடம் கணவனாக நெருங்கும் ஆசை பெருகி விட்டது. மித்ராவும் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அதனால் தான் அவனின் கட்டுப் பிரித்த அன்று, அவன் நண்பனிடம் சில யோசனைகள் கேட்டான்.

ஆனால் இவனின் பேச்சுகளை அரைகுறையாக கேட்ட சரவணன், அதை தனக்குத் தெரிந்த வகையில் யூகித்து, மித்ராவின் வாழக்கையில் குழப்பம் ஏற்பட வேண்டும் என்று விரும்பினான்.

அவனின் அந்த எண்ணத்திற்கு காரணம் இருந்தது. மித்ராவோடு திருமணம் நின்ற பிறகு, சரவணனோ, அவன் அம்மாவோ அத்தனை தூரம் கவலைப் படவில்லை. அவன் அப்பா தான் அவசரப் பட்டுடீங்க என்பது போல் பேசினார். இந்த காலத்தில் பெண் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது.

அதிலும் படிப்பு, வசதி என அனைத்தும் பொருத்தமாகக் கிடைப்பது குதிரைக் கொம்பு தான். படிப்பு, வசதி இருந்தால் அனுசரணை என்பது கேள்விக் குறியாகி விடுகிறது.

சரவணனின் அப்பாவிற்கு மித்ராவைப் பார்த்தவுடன் தெரிந்தது அனுசரையான பெண் என்பது. அதோடு தூரத்து உறவு என்பது வேறு. அதனால் தான் திருமணத்தை நடத்தி விட எண்ணினார்.

ஆனால் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. என் பிள்ளைக்கு அடுத்த முஹூர்தத்தில் ஜாம் ஜாம் என்று நடத்திக் காண்பிக்கிறேன் என்று அவனின் அம்மா சவால் விட்டார்.

அவர் பிள்ளைக்கு என பெண்கள் க்யூவில் நிற்பார்கள் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கல்யாணம் நின்றதைக் கேள்விப்பட்டவர்கள் யாரும் பெண் தர முயலவில்லை.

இத்தனைக்கும் அவர்களில் பாதிப் பேர் மித்ராவைப் பார்க்கும் முன் பெண் கொடுக்க தூது மேல் தூது விட்டவர்கள் தான்.

இப்போதோ சரவணன் அம்மாவின் தலையைக் கண்டால் தெறித்து ஓடிவிடுகிறார்கள்.

மித்ரா வீட்டார் இவர்களைப் பற்றி எங்கும் பேசவில்லை. அவர்களைப் பொறுத்த வரை மித்ரா ஷ்யாமிற்குதான் படைக்கப்பட்டவள். இடையில் நடந்தது ஏதோ நேரம் சரியில்லாமல் நடந்தது. அந்த எண்ணம் தான் அவர்களுக்கு.

ஆனால் இருவருக்கும் பொதுவான சொந்தக்காரர்கள், சரவணன் வீட்டாரின் பேராசைப் பற்றிக் கூறவே, இப்போது இவர்களின் வண்டவாளம் தெரிந்து யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இதனால் அம்மாவும், பையனும் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

சரவணன் அம்மாவிற்கு மூட்டு வலி அதிகம் ஆகவே, ஊரில் பார்த்த டாக்டர், எலும்பு சிறப்பு மருத்தவரை பார்க்க சொன்னார்.

அதனால் நண்பர்களின் பரிந்துரையில் சேகரிடம் தன் அம்மாவின் ரிபோர்ட் காட்டி விட்டு, மேற்கொண்டு ட்ரீட்மென்ட்ப் பற்றிப் பேச வந்து இருந்தான்.

அவன் சேகரிடம் பேசி விட்டு வெளியேப் போய் காரை எடுக்கும் போதுதான் மித்ரா, ஷ்யாமைப் பார்த்தான். ஷ்யாம் ஏதோ சொல்ல, மித்ரா அதற்கு அவன் தோளைத் தட்ட, என்று பார்த்தவனுக்கு, தான் நிராகரித்தவள், சந்தோஷமாக இருப்பதா என்ற பொறமை தோன்ற ஆரம்பித்து விட்டது.

அவர்களை பாலோ செய்தவன், மித்ரா, சுமித்ரா இருவரும் மாத்திரை வாங்கப் போகவும், சேகர், ஷ்யாம் மட்டும் தனியாக இருப்பதைப் பார்த்து விட்டு, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் , மாறி வந்தது போல் வந்து கதவைத் திறந்து விட்டு, ஷ்யாமைப் பார்த்துவிட்டு மூடுவதாக நடித்தான்.

ஷ்யாம் சரவணனைப் பார்க்காததால், அவன் பேச்சைத் தொடர, சேகரும் அதற்குப் பதில் சொன்னான்.

அது சின்ன ரூம் தான். பத்துக்கு பத்து என்ற அளவில் தான் இருந்தது. நர்ஸ் கூட இல்லை. அதோடு நண்பர்கள் என்பதால், சற்று உரக்கவே பேசிக் கொண்டு இருந்தார்கள் ஷ்யாம், சேகர் இருவரும்.

இவர்கள் பேசியது நன்றாகவே ரெகார்ட் ஆகி விட்டது சரவணன் காஸ்ட்லி மொபைலில்.

இதை எப்படி பயன்படுத்துவது என்று யோசிக்க ஆரமபித்து இருந்தான் சரவணன்.

கட்டுப் பிரித்து வீட்டிற்கு வந்த ஷ்யாம், மித்ரா, சுமித்ரா மூவரும் டாக்டர் சொன்னதை எல்லாம் வீட்டில் சொல்லவே, இன்னும் சற்று நாட்கள் கவனமாக இருக்குமாறு எல்லோருமே அட்வைஸ் செய்தனர். ரொம்ப நாள் கழித்து ஷ்யாம் டைனிங் டேபிளில் சாப்பிடவே டின்னெர் கல கலவென்று இருந்தது.

அன்று இரவு ஷ்யாமிற்கு அலுவலக போன் வரவே, மித்ராவும் ரொம்ப நாள் கழித்து தன் வின்னியைப் பார்க்க சென்றாள்.

அவள் என்ன மூட்டோடு பார்க்கிறாளோ, வின்னியும் அதே மூடில் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும்.

ஷ்யாம் போன் பேசி விட்டுத் திரும்பி பார்த்த பொது மித்ரா தன் வின்னியிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

“ஹாய்.. வின்னி.. ஹொவ் ர் யு ? பார்த்து ரொம்ப நாள் ஆச்சே?” என்றவள், அதன் மூக்கைத் திருகியவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.