தனது பதிலுக்காக தனது தங்கை காத்துருக்கிறாள் என்பதை உணர்ந்தவார்.... இப்பொழுது இது ரொம்ப முக்கியமா??? பருவதம்...
உன்னை நான் நடக்க போவதை பற்றி பேச சொன்னேன்.... நடந்து முடிந்ததை பற்றி இனி எப்போதும் என்னிடம் பேசாதேயே என்று கோபத்துடன் கூறுவது போல தனது தங்கையின் கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்தார்.
ரிஷியின் மீது இருக்கும் கோபத்தில் தான் தனது அண்ணன் இப்படி பேசுகிறார் என்று பருவதம் அம்மாள் நினைத்தார்...
நடக்க போவது என்றால் என்னன்னா நீங்கள் தான் சொல்லவேண்டும்???? ரிஷியும் கீதாவும் தவறு செய்து விட்டார்கள்.... இப்போது நாம் அதற்கு என்ன செய்ய முடியும்...
அவர்கள், மீது கோபப்பட்டால் அது சரியாகிவிடுமா???? சொல்லுங்கள்...
ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவர்.... நான் அவர்கள் மீது கோபப்பட வில்லையம்மா....
நான் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்.
அண்ணா, நீங்கள் சொல்வது உண்மைதானா.... ரிஷிக்கும் கீதாவிற்கும் கல்யாணம் செஞ்சு வைக்க போறிங்களா...
ஆம்... என்பது போல என்று சதாசிவம் தலை ஆட்டினார்...
அண்ணா... ரொம்ப சந்தோசம்.... நீங்க, அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டிங்களோனு நினைச்சேன்...
ரிஷி, இந்த விஷயத்தை கேட்ட ரொம்ப சந்தோஷப்படுவான்.... எல்லா கெட்டதிலும் ஒரு நல்லது நடக்குனு சொல்வாங்க ... அது இது தான் போல....என்று பருவதம் அம்மாள் சந்தோஷப்பட்டார்.
சதாசிவமோ, திருமணம் என்ற பந்தத்தின் முலம் கீதாவை ரிஷியுடன் சேர்த்து வைத்து அவர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடி கொள்ள விரும்பினார்.
ஆனால், அவர் செய்த பாவத்திற்கு பரிகாரத்தை கீதா தான் சொல்ல போகிறாள் என்பதை இப்போது அவர் உணர வாய்ப்பில்லை.
பருவதம், இப்போது ரிஷி கீதா தன்னால் தான் கையை கிழித்து கொண்டால் என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கிறான்.
கீதா எதற்காக அழுகிறாள்??? அவள் மனதில் என்ன இருக்கிறது என்றும் எனக்கு தெரிய வில்லை...
அப்படி இருக்க, அவர்கள் இருவரும் இப்போது திருமணத்திற்கு சம்மதிப்பார்களா??? என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.
அண்ணா, நான் இருக்கும் போது நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்????? உங்களது சம்மதித்திற்கு தான் நான் இவ்ளோ நாள் காத்து கொண்டு இருந்தேன்.
இனி, அவர்கள் இருவரையும் நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்கிறேன். போதும் அவர்களது கண்ணாமூச்சி விளையாட்டு.... இதற்கு மேல் நாம் தான் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க வேண்டும்.
உண்மையை சொல்லவேண்டும் என்றால், இதில் என் சுயநலமும் இருக்கிறது அண்ணா....
அவர்களிடம் தான் ராஜகுட்டி வளர வேண்டும். எனது காலம் முடிந்து விட்டது.... ரிஷி, கீதா இருவரால் மட்டுமேயெ ராஜகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளமுடியும்.
அவர்களிடம் இருப்பது தான், அவனுக்கும் பாதுகாப்பும் கூட ... அதேயே போல எனது சொத்து முழுவதையும் நான் ரிஷிக்கு எழுதி வைக்க முடிவு செய்து விட்டேன்....
அதையும் ரிஷியே பார்த்துக்கொள்ளட்டும்... இந்த சொத்தால் தான் நான் என் மகனை இழந்தேன் .... என்று கண்கலங்கினார்.
இனி, இருக்க போகும் நாட்களில் ரிஷியும் கீதாவும் நன்றாக வாழ்வதை பார்த்தாலே எனக்கு போதும்.
தனது, தங்கையின் கண்ணீரை கண்ட சதாசிவம் அவரது தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார்.
இனி, ஏதும் நடக்காதம்மா.... நீ ஆசைப்பட்டது போலவேயே கீதா என் வீட்டின் மருமகள் ஆக போகிறாள்...
ஒருவேளை கீதாவேயே நினைத்தாலும் இதை மாற்றமுடியாது.... நான் மாற்றவும் விடமாட்டேன்...
இந்த ஜென்மத்தில் எனது மருமகள் கீதா தான் என்று உறுதி யுடன் கூறியவர் கார் யை ஸ்டார்ட் செய்தார்.
ஆனால், நாம் இந்த திருமணத்தை சிவகாமியிடம் எப்படி சொல்லுவது என்று தான் எனக்கு புரியவில்லை.
ஏனோ, அவளிடம் கீதாவை பற்றிய உண்மையை கூறுவது சரியென்று எனக்கு தோன்றவில்லை.
சிவகாமியிடம், கீதா ரிஷி திருமணத்தை பற்றி நீ ஏதும் கூறவேண்டாம்.... அவளை பொறுத்தவரை கீதா சேகரயின் மனைவியாகவேயே இருக்கட்டும்.
நேரம் வரும் பொழுது, நானேயே சிவகாமியிடம் கூறுகிறேன்....
பருவதம் அம்மாளுக்கும் தனது அண்ணண் கூறுவது தான் சரியென்று பட்டது.....