(Reading time: 13 - 26 minutes)

கீதாவின் அறையில் இருந்த ஜன்னலின் வழியே ரிஷி இருட்டை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.

அவனது, முதுகுக்கு பின்புறம்  கீதா கட்டிலில் படுத்து இருந்தாள்.

கீதாவின்  கண்களை, ரிஷியால் பார்க்க முடியவில்லை.

கீதா, அவன் மீது கோபப்படவில்லை.... மாறாக, அவள் அவனை பார்க்கும் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிந்தது....

அவளது அந்த பார்வை தான் அவனை  மேலும் கொன்றது....

இது நாள் வரை, தன்னிடம் பேசமாட்டாளா????? பார்க்கமாட்டாளா ???? என்று இருந்தவன் இன்று அவளே தன்னை நெருங்கி வருவது போல உணர்ந்தான்.

ஆனால், இது எப்படி முடியும் .... நான் கேட்ட வார்த்தை அவளை எமனிடமேயே அல்லவா கூட்டி சென்று விட்டது.

ஆனாலும், இப்பொழுதும்  அவளது கண்களில் இருக்கும் காதலை என்னால் உணர முடிகிறது.

கீதா, கையை கிழித்து கொண்டு தரையில் விழுந்த காட்சி அவன் கண் முன் தோன்றியது.....

அய்யோ! கடவுளையே எல்லாம் என்னால் தான்... காதலே வேண்டாம் என்று இருந்தவளை மிரட்டி காதலிக்க வைத்தேன்...

நான் மிரட்டி காதலிக்க வைத்தாலும் அவளது காதல் உண்மையானது.எனக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று என்னைவிட்டு சென்று இருக்கிறாள்.

எனக்காக மூன்று மாதம், தாலியின்றி  என்னுடன் வாழ்ந்தாள்....  பாவம், அதற்கும் அப்பாவிடம் அவளுக்குத்தான் கெட்ட பெயர் கிடைத்தது.

கீதாவிற்கு, இத்தனை கஷ்டம் கொடுக்கவா நான் அவளை காதலித்தேன்???? பூவை விட மென்மையான அவளது கையில் இருந்து நான் இரத்தத்தை வரவைத்து விட்டேன்.

இது எல்லாத்திற்கும் மேலாக அவளது தாயை பற்றி உண்மை அறியாமல் அவளிடமேயே அசிங்கமாக பேசிவிட்டேன்.....

நான் கேட்ட வார்த்தையை தாங்கி கொள்ள முடியாமல் தான்  அவள் உயிரை விடவேயே துணிந்தாள்.

இதுவரை என்னால் கீதா அனுபவித்த கஷ்டம் எல்லாம் போதும். கீதாவிற்கு இதற்கு மேல் என்னால் எந்த ஒரு துன்பமும் ஏற்படக்கூடாது.... 

கொஞ்ச காலம் அவளை விட்டு விலகி இருப்பது தான் அவளுக்கு நல்லது....

கீதா, தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை இனியும் காயப்படுத்த கூடாது....  என்று எண்ணியவன் அவளை விட்டு விலகி செல்ல முடிவு எடுத்தான்....

அவனது, முதுகை பார்த்த வண்ணம் படுத்து இருந்த கீதாவின் மனதிலோ எதோ ஒரு நிம்மதி பரவி இருந்தது.

மருந்தின் வீரியத்தில் கீதாவிற்கு தூக்கம் வந்தாலும்,  ரிஷியை பார்த்து கொண்டேயே இருக்கவேண்டும் போல அவளுக்கு தோன்றியது....

அவளது உயிர் போய் விடுமோ என்ற அச்சத்தில் ரிஷி பட்ட துன்பங்களை கீதா அரை மயக்கத்தில் இருந்தாலும் .நன்கு உணர்ந்தாள்.

எனக்காக ஒருவன் ..... என் மீது உயிரேயே வைத்து இருக்கும் ஒருவன்.....  இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்......அவனது மடியில் என் உயிர் போனாலும் சந்தோஷமேயே.....

என் வாழ்க்கையில் உன்னுடன் இருந்த போது மட்டுமேயெ நான் பாதுகாப்பையும் அன்பையும் உணர்தேன் ரிஷி.

இப்ப கூட உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரில ரிஷி... என் அம்மாவால நீ என்ன  பத்தி தப்பா நினைச்சாலும் நான் கவலை பட மாட்டேன்.

உன்கிட்ட இருந்து இவ்ளோ நாள் நான் என்  அம்மாவை பற்றிய ரகசியத்தை  மறைச்சு வைத்து இருந்தேன்....

நீ கேட்ட விதம் தப்பா இருந்தாலும் அது என்ன உண்மையை சொல்ல வைக்கத்தான் அப்படி செஞ்சன்னு எனக்கு புரியுது ரிஷி. 

நீ எப்பவுமேயே ஒரு முரடன்.... உனக்கு எதையும் soft யா டீல் பண்ணவேயே தெரியாது....

என்னோட காதலையே நீ மிரட்டித்தனயா வாங்குனா என்று நினைத்தவள் அன்றைய ஞாபகத்தில் சிரித்தாள்.

என் அம்மாவை பற்றி தெரிஞ்ச பிறகும் நீ என்ன காதலிக்குரிய ரிஷி என்று அவள் மனதினுள் கேட்ட அடுத்த நொடி ரிஷி அவளை திரும்பி பார்த்தான்...

நான் மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டு கூறிவிட்டேனோ ரிஷி எப்படி நான் கேள்வி கேட்டதும் என்னை பார்க்கிறான்.... நான் அவனை கூப்பிடவில்லையே...

மனதிற்குள் தானேயே பேசினேன் அதும் அவனது முதுகை பார்த்து.... என்று புரியாமல் அவனை பார்த்து முழித்தாள்.

கீதா, தன்னை கூப்பிடுவது போல உணர்ந்துதான் ரிஷி திரும்பி பார்த்தான்.

ஆனால், அவளிடம் என்னவென்று கேட்பது.... கீதாவோ, என்னை பார்த்து திருதிருவென முழித்து கொண்டு இருக்கிறாள்.

இவ்ளோ நேரம் தூங்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறாள்???? ஏற்கனவேயே உடம்பில் இருந்து அதிக இரத்தத்தை இழந்து இருக்கிறாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.