தீரன் தனிப்பட்ட அவனின் பணத்தில் தனக்கு உதவியதை அறிந்த மாதவன் அன்றிலிருந்து மிகவும் சின்சியராக தனது கம்பெனிக்கு உழைக்கும் ஊழியனாகவும் தனது சி.ஐ.ஓ தீரனின் மேல் கண்மூடித்தனமான பக்தியையும் வெளிபடுத்த ஆரம்பித்திருந்தான்.
அவனின் அந்த சின்சியாரிடியையே தீரன் இப்பொழுது மாதவனிடம் சுட்டிக்காட்டினான்.
தீரன் மாதவனிடம் என்னிடம் கேட்க நினைப்பதை தயங்காமல் கேள் என்று கூறியதும் சற்று அவனின் மேல் இருந்த பயத்தை ஒதுக்கியவன் (மாதவனுக்கு தீரன் பிராங்கின் அக்கச்வுண்டில் இருக்கும் பணத்தை மிக அதிக அளவு பணத்தை பிராங்கிற்குத் தெரியாமல் கொள்ளயடிகிறான் என்பதை மட்டுமே தெரிந்து வைத்திருந்தான் ஆனால் அதன் மொத்த மதிப்பு என்ன என்பதயும் ஏன் இவ்வாறு செய்கிறார்? நண்பனுக்கே ஏன் இந்த துரோகம் என்றே குழம்பி நின்றான் ) எனவே தயக்கத்துடன் பாஸ் மிஸ்டர் பிராங் நாம் செய்த செயலை சுமல் செய்தால் அவரின் அக்கவுன்ட் பணத்தை கையாடல் பண்ணியதாக கம்ளைன்ட் ஆதாரத்துடன் சப்மிட் செய்தால் முதல் குற்றவாளியாக யாழிசையும் அதன் தொடர்ச்சியாக நாமளும் பிட்டிபட்டுவிட மாட்டோமா! என்று தனது சந்தேகத்தை கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் நீ சொல்வதுபோல் பிராங்கால் எதுவும் வெளிப்படையாக செய்யமுடியாது ஏனெனின் அவனின் அந்த அக்கவுன்ட் பணம் முதுவதுவும் கருப்பு சந்தைக்கு உரிய பணம் எப்படி அவ்வளவு பணம் அவனுக்கு கிடைத்து என்பதற்கான விளக்கத்தை அவனால் வெளியில் பகிரங்கமாக சொல்லமுடியாது.
மேலும் அவனுக்கு கிடைத்த அந்த பணம் என்னை இங்கு செய்ய அனுப்பியிருக்கும் வேலையை வெற்றிகறமாக செய்து முடிக்க ஸ்பான்சர் செய்த பெரும் பணமுதலைகளுக்கு அந்த அக்கவுண்டில் உள்ள பணம் காணமல் போய்விட்டது தெரிந்தால் பிராங்கின் நிலைமை மிகவும் சிக்கலாக மாறிவிடும்.
எனவே பிராங் சீக்ரட்டாகத்தான் அவனின் அக்கவுன்ட் பணத்தை சுருட்டியவர்களை தேட ஆரம்பிப்பான் அவ்வாறு தேடி இங்கு வந்தால் அவனிடம் சுட்ட பணத்தின் மூலம் நாம் நம் பலத்தை, பாதுகாப்பை பிராங்கால் மட்டுமல்ல வேறு யாரும் நெருங்காதவாறு பலப்டுத்தியிருப்பேன்.
அதை உடைக்க வேண்டுமானால் பிராங் அவன் சொத்தை எல்லாம் விற்கும் பணத்தை விட அதிகமாக பணம் மற்றும் பலம் அவனுக்கு தேவைப்படும்.
நண்பனுக்கே ஏன் இந்த துரோகம் செய்கிறேன்? என்று நீ நினைக்கலாம் நாம் சிறுவனாக இருந்தபோதே நட்புக்காகத்தான் அவனிடம் இணைந்தேன். முதலில் அவனும் என் நல்ல நண்பனாகத்தான் நடந்துகொண்டான் .
என் அம்மா நான் ஸ்கூலில் கொடுக்கும் ஹோம்வொர்க் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடித்தால் எனக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாகவும். ஸ்கூலில் எக்சாமில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் நான் கேட்ட டாயை வாங்கிகொடுப்பதாகவும் என் அம்மா என்னுடைய முன்னேற்றத்திற்கு என்னிடம் டீல் பேசியதாலோ என்னவோ எனக்கு சிறுவயதில் இருந்தே டீல் மேல் ஒரு மோகம் பிறந்தது.
என்னிடம் இருந்த திறமையை பிராங் அவனின் தேவைக்கு யூஸ் செய்ய என் டீல் மோகத்தை பயன்படுத்திக்கொண்டு சாதித்துகொண்டான். எனக்கும் அப்பொழுது நான் ஆசைப்பட்டதை பிராங்க்கின் டீல் மூலம் அடைய முடிந்ததால் அதை அப்படியே கண்டினியூ செய்துகொண்டேன். கடைசியில் எங்களுக்கு இடையில் உள்ள நட்பு செத்துபோய் ஒருவரின் தேவையை ஒருவர் பயன் படுத்திகொல்வதையே எங்களுக்குள் நட்பு என்ற போர்வையில் நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்திருகிறோம்.
இருந்தாலும் நான் மனதில் அவன் என் நண்பன்தான் என்று பதிந்துவைதிருந்த பிம்பத்தை மாற்றிக்கொள்ள முயன்றதில்லை அதையும் ஒருநாள் பிராங் மாற்றிவிட்டான். அவ்வாறு அவன் என் நண்பனில்லை என்பதை நான் தெரிந்துகொள்ள அவன் செய்த காரியத்தினை நினைத்தால் அப்படியே அவனை.... என்று ஆங்காரமாய் சொன்னவனின் கண்கள் இரண்டும் சிவந்து கை விரல்களை மடக்கி அவனின் தொடையிலேயே குத்திகொண்டான்.
அதை கண்ட மாதவன் பாஸ்... என்று பயத்துடன் கூறினான்.அதில் தன்னை நிலைபடுத்திகொண்ட தீரன் அவனுக்கு வலிக்கணும் நான் விரும்பியதை இல்லாமல் செய்த அவனுக்கு அவன் விரும்பும் பணம் அவனிடம் இல்லாமல் செய்யணும்.
அவனிடம் இருக்கும் செல்வத்தை அவன் யூஸ் செய்தது என்னை வலிக்க செய்ததுபோல் என் மூளை என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி அவனை ஒன்றுமில்லாதவனாக செய்ய நான் முடிவெடுத்திருந்தேன்.அதற்கான சந்தர்ப்பத்தை அவனே வழங்க முன்வரும்போது அச்சந்தர்பத்தை நழுவவிட நான் என்ன முட்டாளா?
இந்தியாவில் அதுவும் என் பூர்வீகபூமியை என்னை வைத்தே அழிக்க நினைத்ததுதான் அவன் செய்த முதல்தவறு. என் உடை நடை பாவனை இவைகள் யாவும் நான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவின் நாகரிகத்தை பறைசாற்றுவதாக இருக்கலாம்.
ஆனால் எனக்குள் என் மாம் விதைத்திருந்தது தமிழன் நான் என்பதே! அதை நான் உணர்ந்ததோ என் தாயின் இழப்பிற்கு பிறகே. என் வேரை தேடி என்னை மை மாம் இங்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருந்ததை நான் பார்க்கும் நேரத்தில் இந்த இடத்தை சூறையாடும் பணியை என்னிடமே பிராங்க் கொடுக்க முன்வந்தது அவனை அவனே அழிக்கும் ஆயுததத்தை என் கையில் கொடுத்ததுக்கு ஒப்பாகிவிட்டது.