அதே சமயத்தில் தாரிகா செய்தது குற்றமும் அல்ல ,சோ நம்ம பக்கத்து நியாயத்தை பொறுமையாக எடுத்து சொல்லணும் ,தேவைன்னா இது போல் ஒன்று இனி நடக்காதுன்னு நாம உறுதி மொழி கொடுக்க வேண்டியது தான் ''
''ஐயோ அது நாம தப்பு செய்ஞ்சோம்ன்னு சொல்றாப்புல ஆகாதா ''என்று ஆற்றாமையுடன் தமிழ் கேட்க
'' இல்ல அப்படி ஆகாது , பாரு பெற்றோர்கள் அவர்களோட உயிருக்கு உயிரான பிள்ளைகளை நம்மளை நம்பி தான் அனுப்புறாங்க ,அதனால் அவர்கள் பாதுகாப்பு நம் சிந்தையில் முக்கிய இடத்தில இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் ,
அந்த நம்பிக்கையை அவர்கள் மனதில் ஏற்படுத்த நாம் கொஞ்சம் நிலை தாழ்ந்தாலும் மோசமில்லை ,அதே சமயத்தில் ,நியாயத்தை எடுத்து சொல்லவும் நமக்கு உரிமை இருக்கு ,
அதனால் நீ வழக்கம் போல் ,மாணவர்கள் மன்றத்தை கூட்டு ,
அதில் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன இருந்தாலும் தயங்காமல் சொல்லலாம் ''என்று கூறி விட்டு அமர
ப்ரெசிடெண்ட் எழுந்து ''பிரச்சனை எதுவா இருந்தாலும் ,வன்முறை கூடாது ,என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது ,அதனால் டீச்சரை அடிக்கவென்று கிளம்பியது பெரும் குற்றம் , அதை நாம் எல்லோரும் ஒப்பு கொள்கிறோமா ''என்று கேள்வி எழுப்ப