அவள் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“நான் ஹாலில் உட்கார்ந்திருக்கேன். நீ கிளம்பி வா.”
அபுபக்கர் சென்றுவிட்டான்.
கருப்பையா குளியல் அறைக்குள் சென்றான்.
அவன் வெளியில் வரும் நேரம் பரியா வந்தாள்.
“அண்ணா. நீங்க சாப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு காலை டிபன் செய்துட்டேன். சாப்பிட்டுவிட்டு டீ குடிக்கலாம். வாங்க. அவர் காத்திருக்கார்.”
அவனிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சிவரஞ்சனி கஞ்சி குடித்த பாத்திரத்தை எடுத்துச் சென்றாள்.
கருப்பையா தயாராகி வெளியில் சென்றான்.
சாப்பிட்டு முடித்துவிட்டுக் கிளம்பும்போது அறைக்குள் வந்தவன் கொஞ்சம் தயங்கி நின்றான்.
“வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுறேன். பரியா உன்னோட இருக்கிறதுனால் நான் தைரியமா போறேன். ஏதாவது த
...
This story is now available on Chillzee KiMo.
...
.
கூடவே சகாயராஜூம் நின்றிருந்தான்.
“வாங்கண்ணா.”
“எனக்கு வேலை இருக்கும்மா. புனிதாவை விட்டுட்டுப் போகத்தான் வந்தேன். ஆமா சிவாவுக்கு இப்ப எப்படியிருக்கு?”
“இப்ப கொஞ்சம் தெளிவாகியிருக்காண்ணா.”
“சரிம்மா. நான் புனிதாவை அழைச்சுட்டுப் போக வர்றப்ப பார்க்கிறேன்.”