அந்த விழா நாளில் மித்ரா தன் வரவேற்பிற்கு எடுத்த லேஹான்காவில் வர, ஷ்யாமும் அவள் உடைக்கேற்ற புல் பார்மலில் வந்தான்.
ராம் வழக்கம் போலே புல் பார்மலும் மைதிலி அழகான டிசைனர் புடவையிலும் வர, பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது.
நால்வரும் ஷ்யாமின் பென்ஸ்சில் சென்றனர். ராம் தன் வண்டியைத் தவிர வேறு எதிலும் அதிகம் வர மாட்டான். ஷ்யாம் ஒட்டவே, ராம் முன்னாடி உட்காரப் போக, ஷ்யாமோ
“டாட்.. இது மை ஸ்வீட் ஹார்ட்டோட பிளேஸ். அவ வந்தா அவளுக்கு மட்டுமே இந்த பிளேஸ். நீங்க உங்க மிதும்மா பக்கத்தில் போய் உட்காருங்க” என,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
மைதிலி “போதும் டா உன் அரட்டை. “ என்றபடி பின்னால் ஏறினார். மித்ராவோ சிவந்த முகத்தோடு முன்னால் ஏறினாள்.
மண்டபத்திற்கு சென்று இறங்க, இவர்கள் நால்வரையும் பார்த்தவர்கள் ரசித்தார்கள்.
மித்ரா அப்பா முரளி, ராம் பிரெண்ட் சந்தோஷ் எல்லோருக்கும் பத்திரிகை சென்று இருப்பதால், அவர்களும் வீட்டில் பெரியவர்கள் எல்லோரும் வந்து இருந்தனர்.
அடுத்த தலைமுறையில் ஷ்யாம் மட்டுமே தொழிலுக்குள் வந்து இருந்தான். மற்றவர்கள் எல்லோருமே படித்துக் கொண்டு இருப்பதால் அநேகம் பேருக்குத் தெரியாது.
ஷ்யாமை நன்றாகவே எல்லோருக்கும் தெரிந்து இருந்தது. ராமின் மகனாக மட்டுமில்லாமல், ஷ்யாம் தனியாகவும் அடையாளம் காணப்பட்டு இருந்தான்.
அவனின் மனைவியாக மித்ரா வலம் வந்ததில் அவர்களின் ஜோடிப் பொருத்தம் பார்த்து வியந்தனர். ராம் வீட்டினருக்கு அதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி.
இதற்கு இடையில், மைதிலியைப் பார்த்து விட்டு விழா பொறுப்பாளர் வந்து ரிபோர்ட் செய்து விட்டுப் போக, மித்ராவிடம் வந்து ஸ்டாப் சைடு ஆர்கனைஸ் செய்தவர் வந்து பேசிவிட்டுப் போனார்.
இதைப் பார்த்து எல்லோரும் வியந்து சிரித்தாலும், தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வரவே அன்று இரவு வெகு நேரமாக, எல்லோரும் அசதியில் படுத்து விட்டனர்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்கள் அந்த விழா தொடர்பான பட்டுவாடாக்களை எல்லாம் முடித்து ரிலாக்ஸ் ஆன பின் , மித்ராவிற்கு மீண்டும் அந்த ரிபோர்ட் நியாபகம் வர, அதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று யோசித்தவள், பின் ஒருவரிடம் பேசினாள்.
அதற்கு பதில் கிடைத்தப் பின் கொஞ்ச நேரம் யோசித்தவள், இதை அப்படியே விட்டு விடலாம் என்று எண்ணினாள். பிறகு ஷ்யாம் அத்தான் இஷ்டப் படி இருக்கலாம் என்று முடிவு செய்தாள்.
மித்ரா ஷ்யாமிடமிருந்து அடுத்த கட்ட நெருக்கத்தை எதிர்பார்க்க, ஷ்யாமோ விலகிப் போனான்.
முதல் இரண்டு மூன்று நாட்கள் அதை உணராமல் இருந்த மித்ரா, பிறகே அதை உணர்ந்து திடுக்கிட்டாள்.
தொடரும்
{kunena_discuss:1187}