அடக்கடவுளே ஒருபொண்ணு பேசிட்டா உடனே காதல்தானா சராசரியாய் நீங்க இருப்பீங்கன்னு நான் நினைக்கலை
அலெக்ஸ் சட்டென்று சோகமானான்.
மன்னிசிடுங்க ஏஞ்சலினா நான்...ஏதோ,,,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
இருங்க இருங்க அதுக்குள்ளே காத்து போன பலூன் மாதிரி ஏன் உங்க முகம் சுருங்கிப்போகுது. நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தீங்க அலெக்ஸ் என்ன நான் உங்க காதலை மறுத்திட்டேன்னு கோபமா ? அதுக்குக் காரணமும் நீங்கதான்.
என்ன பாக்குறீங்க ? புறாவிடுதூது, மயில் விடு தூது, கடிதப் போக்குவரத்து, இமெயில்ன்னு இன்னும் என்னன்னவோ முறையிலே காதலை சொல்றாங்க ஆனா உங்களுக்கு எக்ஸ்பிரஸ் பண்ண எத்தனை அழகான இடம் கிடைச்சிருக்கு சுற்றிலும் கடல் அளவுக்கும் மீறிய தனிமை அழகாய் ஒரு பொண்ணு அவளும் உங்கமேல அளவு கடந்த காதலை வைச்சிருக்காளே அவளிடம் தன் காதலை சொல்லும் போது, எப்படிச் சொல்லணுமின்னு உங்களுக்கு தெரியவேண்டாம். ஏதோ ரோட்ல போற பொண்ணுகிட்டே அட்ரஸ் கேட்கிறமாதிரி சட்டுன்னு லவ் பண்றேன்னு சொல்லிட்டீங்களே ?!
என்னது ? அப்போ நீங்களும்...நீயும்...
பல்பு டக்கு டக்குன்னு ப்யூஸ் போகுது,,,, அட்மினரல் கிட்டே சொல்லி செக் பண்ணச் சொல்லணும்
ஏய் என்ற கேள்வியோடு அவளை விரட்ட ஏஞ்சலினா ஓடினாள்.
கடற்காற்று அவர்களின் காதலை ஆசீர்வதித்தது.
உத்ரா படுவேகமாக ஓடிவந்து பரத்தின் மேல் மோதிக் கொண்டாள். பரத் அவளை பிடித்து நிறுத்தினான்
என்னாச்சு உத்ரா ? ஏன் இப்படி வேகமா ஓடிவர்றே எனக்கு பயமா இருக்கு, ஏற்கனவே இங்கே தேவையில்லாதது எல்லாம் நடக்குது.
பரத் உங்ககிட்டே நான் நிறைய விஷயம் சொல்லணும். பத்மினி நாம நினைச்சா மாதிரி காணாம போகலை அவளை ப்ரியன்தான் ஏதோ பண்ணியிருக்கான்.
என்ன தலையும் புரியாம வாலும் புரியா பேசறே உத்ரா, ப்ரியன் அவன் என்ன பண்ணான் இப்போ எங்கே அவன்.
பத்மினி சில தகவல்களை தன்னோட மொபைல்ல சில தகவல்களை சேகரிச்சி வைச்சிருக்கா அதை தெரிந்துகிட்டே ப்ரியன்தான் அவளை ஏதாவது பண்ணியிருக்கணும் நான் அவனை கம்ப்யூட்டர் ரூமில் வைத்து வெளிப்புறமா தாழ் போட்டுட்டேன். முதல்ல நீங்க இந்த ஆதாரத்தைப் பாருங்க என்று மொபைல் போனின் ஒளித்திரையில் அவள் காண்பிக்க பரத்தின் கண்கள் நீரஜாவைப் பாழாக்கிய ப்ரியனின் உருவத்தின் மேல் விழுந்தது.
ஆனால் அதே நேரம் வேறுறொரு வழியில் இருந்து ப்ரியன் தப்பியதை இருவரும் அறியவில்லை ,....
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}