“உங்க கம்பெனி ஆள் தான் என்னைப் பார்க்க வந்தது.”
அதைக் கேட்டதும் அந்தப் பெரியவர் கோபத்துடன் மகனைப் பார்த்தார்.
அவன் தலை குனிந்தான்.
“தம்பி. நீங்க...”
“சார் இடையில் பேசறதுக்கு என்னை மன்னிக்கனும். உங்களோடது வளர்ந்த கம்பெனி. நான் இப்பத்தான் இந்தத் தொழில்ல கால் வச்சிருக்கேன். எங்க குடும்பம் சாதாரண குடும்பம். என்னோட அப்பா என்மேல் நம்பிக்கை வச்சிருக்கார். நான் செய்யறது எதிலும் தலையிட்டது கிடையாது. அவரோட ஆசியிலும், என்னோட உழைப்பாலும் இந்த இடத்திற்கு வந்திருக்கேன். நீங்க நினைச்சா என்னோடது மாதிரி எத்தனையோ கம்பெனியை ஆரம்பிக்க முடியும். என்னால் முடியாது.”
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் இடையிட்டார்.
“தம்பி. எனக்குப் புரியுது. இது எனக்குத் தெரியாமல் நடந்த தவறு. நானே சரி செய்திட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சாவா என்கிட்ட விடப்போறீங்க?”
மகாலெட்சுமியும் அங்கிருந்தே பள்ளிக்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆதித்யா பில்டர்ஸ் கம்பெனி முதலாளி சொன்ன மாதிரி கருப்பையாவிற்கு அந்த டென்டர் கிடைத்து அதில் அவன் மும்முரமானான்.
குழந்தைக்கு ஆரவ் என்று பெயரிட்டான் கருப்பையா.