மனோரஞ்சனிக்கு நல்ல வரன் ஒன்று வர வழக்கம்போல் சந்திரசேகர் நன்றாக விசாரித்துப் பார்த்துவிட்டார்.
அவருக்கு முழு திருப்தி.
ஆரவிற்கு ஆறுமாதங்கள் நிறைந்திருந்தன. சிவரஞ்சனி தன் புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
இப்போது இந்த சம்பந்தம் கிடைத்ததும் சந்திரசேகர் சம்பந்தி வீட்டிற்குச் சென்று இந்த விசயத்தைச் சொன்னார்.
அவர்களுக்கும் மிகவும் சந்தோசம்.
மாப்பிள்ளையைப் பற்றி கருப்பையாவிடம் சொன்னார்.
அவனுக்கும் திருப்தி. அவனுக்கு தெரிந்த பையன்தான் மனோரஞ்சனிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை கார்த்திக்.
இவர்களதைப் போன்றே அவன் குடும்பமும் கூட்டுக் குடும்பம்.
சிவரஞ்சனிய
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லாருக்கும்னு நினைச்சேன். பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தால் பேசிப்பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனால் நேரே நிச்சயதார்த்தம்னு சொல்லிட்டாங்க.”
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் வந்தனர். கார்த்திக் விடைபெற்று சென்றுவிட்டான்.