தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 01 - குருராஜன்

இரவு மணி 11.30. சென்னையின் நெரிசல் மிகுந்த சாலைகள் அனைத்தும் வெறுமையாக இருந்தது.
“காதல் ஒரு மந்திரமான வார்த்தை. அதைச் சொல்லும் போதே அதில் ஒரு ரம்மியம் இருக்கும். சிம்பிலா சொன்னா காதல் மூன்று எழுத்துதான். ஆனால் அந்தக் காதல் இல்லாமல் இந்த உலகமே இல்லை. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காதல் தொடாத மனிதனே இல்லை, அப்படிக் காதல் தொடவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை.என்னடா இவன் ஓவரா கவிஞர் மாதிரி கவிதை எல்லாம் பேசுரானே என்று நினைக்காதீங்க, ஜஸ்ட் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். காதலுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதுனாலே தானே அதன் மேலே அவ்வளவு கவிதைகள், பாடல்கள். அப்படிப் பட்ட காதலைப் பற்றிய ஒரு அருமையான பாடலை கேட்போம்” என்று மென்மையான கூறலில் காதலை உயர்வாக பேசிக் கொண்டிருந்தார் ஒரு தொகுப்பாளர் ரேடியோவில்.
அந்த ரேடியோ ஓடிக் கொண்டிருந்த கருப்பு நிற கார் மெர்குரி விளக்கின் வெளிச்சத்தை கிழித்துக் கொண்டு அந்த பீச் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அந்த வருணனைக் கேட்டும் கேட்காதவாறு காரை ஓட்டுவதில் மும்மரமாக இருந்தான் ரகு. அவன் அருகில் மௌனமாக அமர்ந்திருந்தாள் நிலா. அவள் காதிலும் அந்த வார்த்தைகள் விழாமல் இல்லை. நிலா ரகுவை ஏக்கத்தோடுப் பார்த்தாள்.
“காதல், பாட்டு எழுதுரதுக்கும், படத்தில் க்ளிஷே scene வைக்க மட்டும்தான் உதவும். நிஜ வாழ்க்கைக்கு எல்லாம் அது செட்டே ஆகாது” என்று கூறிக் கொண்டே ரேடியோவை off செய்தான் ரகு.
“கல் நெஞ்சகாரன்” என்று தன் மனதிற்குள் அவனைத் திட்டிவிட்டு பார்வையை எதிர்த் திசையில் திருப்பி சாலையின் மீது பார்வையை செலுத்தினாள். அவளது கண்ணின் ஓரத்தில் ஒரு துளி நீர்.
இவை அனைத்தையும் கண்டும் காணாதவனாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ரகு.
அந்த carகுல் சற்று நேரத்திற்கு அமைதி நிலவியது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்”
அந்த காரின் அமைதியைக் கலைத்தது ரகுவின் செல் போன் ரிங் டோன். கார் ஸ்டேரிங்கில் இருந்த பட்டனை ரகு கிளிக் செய்து, காரின் ஸ்பிக்கரிலே கால்ஐ attend செய்தான் ரகு.
“ஹலோ ரகு, வினோத் டா” என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டான் வினோத்.
“ஆ வினோத், சொல்லு டா” என்று கேட்டான் ரகு. வினோத் ரகுவின் நண்பன். வக்கில் பணியில் இருப்பவன்.
“மச்சி நாளைக்கு, 10 மணிக்கு hearing டா. ஞாபகம் இருக்குல்ல” என்று சற்று கவலை கலந்த குறளில் கேட்டான் வினோத்.
எப்படி மறக்க முடியும் ரகுவால் நாளைய தேதியை. ரகுவால் மட்டும் அல்ல நிலாவாலும் தான்.
என்ன சொல்ல போகிறான் என்பது போல் நிலா ரகுவை பார்க்க, “ஞாபகம் இருக்கு டா. நாங்க எத்தனை மணிக்கு கோர்ட்க்கு வரனும்” என்று எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொல்லாமல் கேட்டான் ரகு.
“1 ஹவர் பிபோரா வர மாதிரி பார்த்துக்கோ டா. But மச்சி” என்று அடுத்த வார்த்தையை எப்படிக் கூறுவது என்று தெரியாமல் நிறுத்தினான் வினோத்.
“என்ன டா, இழுக்கிற, டைவர்ஸ்ல எதாவது ப்ராப்லமா” என்று ரகு தன் டைவர்ஸ் பற்றித் தான் கேட்டான். டைவர்ஸ் என்ற வார்த்தை நிலாவின் இதயத்தைக் கத்தி போல் கிழித்தது.
எஸ் நாளைக்கு ரகுவும் நிலாவும் தொடுத்திருந்த விவாகரத்து வழக்கின் தீர்ப்பு.
“சச்ச mutual consent தானே, ஸோ அதுல ஏதும் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நீ நிலா கிட்ட ஒரு முறை பேசி பார் டா” என்று தன் நண்பன் மீது இருந்த உண்மையான அக்கறையோடு பேசினான் வினோத்.
“உன் நண்பன் சொல்வதை கேளேன் டா, ஓரே ஒரு முறை இந்த விவாகரத்து வேண்டாம் நு சொல்லு, காலம் முழுக்க உன் மார்பிலே சாய்ந்து கிடக்கிறேன்” என்பது போல் ரகுவை பார்த்தாள் நிலா.
“அதான் நீயே சொல்லிட்டியே டா, mutual consentநு. அதற்கு அப்பறம் நாங்க என்ன புதுசா பேச போறோம்” என்று நிலாவை பார்த்தவாறே பதில் கூறினான் ரகு.
“ஏன் டா இப்படி உன் வார்த்தைகளால் என்ன கொல்ற, உன்னிடம் பழகாமல், உன்னைப் பற்றி புரிந்து கொள்ளாமல் அந்த விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டதை தவிர நான் எந்த தப்பும் செய்யவில்லையே. எனக்கு ஏன் இந்தத் தண்டனை” என்று மனதிற்குள்லே அழுது புலம்பினால் நிலா.
“அதுக்கு இல்ல டா, நாளைக்கு உன்னோட first anniversary. நாளைக்குப் போய் டைவர்ஸ் எப்படிடா. வேணுனா வாய்தா வாங்கி வேறு ஒரு நாள் பார்த்துகலாம் டா” வினோத் விடுவதாக இல்லை.