வெண்ணிலா வீட்டிற்கு செல்லும்போது கௌவுதம் பங்களாவின் வராண்டாவில் ஒரு பக்கம் நின்று போன் பேசிக்கொண்டிருந்தான். அவன் திரும்பி நின்று பேசிக்கொண்டிருந்ததால் வெண்ணிலா வந்ததை கவனிக்கவில்லை. கௌவுதம் போன் பேசுவதைப் பார்த்த வெண்ணிலா 'சரி நாம் உள்ள சென்று காத்திருப்போம் அவன் போன் பேசிவிட்டு வரட்டும்" என்று வராண்டாவைக் கடந்து உள்ளே சென்றாள். அப்போது தற்செயலாக ஷூ ரேக்கைப் பார்த்தாள். அதில் இருந்த செருப்புகளும் மற்றும் உள்ளே இருந்து வந்த மதுவின் வாடையும் அவளுக்கு கௌவுதமின் நண்பர்கள் வந்திருப்பதை புரியவைத்தது.
உடனே அவளுக்கு அன்று முழுவதும் இருந்த உற்சாக மனநிலை எல்லாம் சட்டென்று வடிந்து அன்று காலையில் இருந்த சோர்வான மனநிலை தொற்றிக்கொண்டது. கௌவுதமின் மேல் காரணமில்லாமல் கோபம் வந்தது. திரும்பி கௌவுதமைப் பார்த்தாள். அவன் இன்னமும் போனில்தான் பேசிக்கொண்டிருந்தான்.
வெண்ணிலா சைக்கிளைக்கூட எடுக்காமல் போர்டிக்கோவிலேயே விட்டுவிட்டு அப்படியே அவுட்கவுஸிற்கு சென்றுவிட்டாள்.
கௌவுதம் வெண்ணிலாவிற்காகத்தான் வெளியில் காத்திருந்தான். தனது நண்பர்கள் வந்தால் வெண்ணிலா விட்டிற்குள் வரமாட்டாள் என்பதால் அவள் வந்ததும் அவளிடம் அவள் போனில் ஏதோ பேசவேண்டும் என்று கூறினாளே அது என்ன என்று கார்டனில் அமர்ந்து பேசலாம் என்று காத்திருந்தான். அதற்குள் அவனுக்கு ஒரு பிசினஸ் கால் வந்தது அதில் கவனம் செலுத்தியதால் அவன் வெண்ணிலா வந்ததை கவனிக்கவில்லை. அவன் போன் பேசி முடித்ததும்தான் வெண்ணிலாவின் சைக்கிளைப் பார்த்தான். அவள் எப்போதும் அவளது சைக்கிளை அவுட்கவுஸின் பக்கவாட்டில்தான் நிறுத்திவைப்பாள். அவள் எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அவள் இல்லை. பின்பு போர்டிக்கோவிற்கு வந்து அவுட்கவுஸைப் பார்த்தான். அவள் அவுட்கவுஸின் உள்ளே சென்று கதவை முடிவது தெரிந்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
சைக்கிள் இங்கேயே நிற்கிறது அப்படியென்றால் அவள் தன்னைப் பார்த்திருக்கிறாள். தன்னிடம் பேச வேண்டும் என்று சைக்கிளை நிறுத்தியிருக்கிறாள். பிறகு ஏன் எதுவும் பேசாமல் சைக்கிளையும் எடுக்காமல் இங்கேயே விட்டுவிட்டு சென்றாள் என்று யோசித்தவனுக்கு உரக்கக் கேட்ட அவன் நண்பர்களின் பேச்சுக் குரல் பதில் கூறியது.
'ஓஓ... இவர்கள் வந்ததைப் பார்த்துவிட்டுத்தான் அவள் உள்ளே வரவில்லை போல' என் புரிந்துகொண்டு அவள் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவுட்கவுஸிற்கு சென்றான். சைக்கிளை அதன் வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு அவுட்கவுஸின் கதவைத் தட்டினான். 'ம்ஹூம்' பதில் இல்லை. இன்னும் சற்று பலமாகத் தட்டினான் இப்போது கதவு திறந்தது. வெண்ணிலா வெளியில் வந்தாள். கௌவுதமைப் பார்த்து நன்றாக முறைத்தாள். அவள் முறைப்பதைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.
"தயவு செய்து இப்படி முறைக்காத வெண்ணிலா ரொம்பக் காமெடியா இருக்கு. என்னால சிரிப்ப அடக்க முடியல" என்றான் சிரிப்புடன்.
அதைக் கேட்டதும் அவளது கோபம் இன்னும் அதிகமானது. முன்னைவிட அதிகமாக முறைத்தாள்.
"சரி. சரி. ஏதோ முக்கியமான விசயம் பேசனும்னு சொன்னியே. தள்ளு உள்ள போயி பேசலாம்" என்று உள்ளே செல்ல முயன்றான்.
வெண்ணிலா வாசலை இரண்டு கைகளால் மறித்து நின்றுகொண்டு " ஒரு முக்கியமான விசயமும் இல்ல. உங்களுக்கு இப்ப வேற முக்கியமான விசயங்கள் நிறைய இருக்கு அதனால அதப்போய் முதல பாருங்க. போங்க" என்றுவிட்டு அவன் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் உள்ள திரும்பப் போனாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அவள் திரும்பும்முன் கௌவுதம் வெண்ணிலாவின் இரண்டு கைகளையும் அவள் முதுகுப்புறம் வளைத்து தன் ஒரு கையால் பிடித்து அவளை தனக்கு முன் கொண்டுவந்தான்.
கௌவுதமின் இந்த செயலில் வெண்ணிலா முதலில் உணர்ந்தது அதிர்ச்சியைத்தான். பிறகு மெல்ல அதிர்ச்சி விலக தான் கௌவுதமிற்கு மிக அருகில் இருப்பதை உணர்ந்தாள்.
அவன்மேல் உள்ள கோபம் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய் அவன்மேல் உள்ள காதல்தான் நெஞ்சம் முழுவதும் நிரம்பி நின்றது. வெண்ணிலாவின் முகம் குப்பென்று சிவந்துவிட்டது. உடம்பில் அட்ரினலின் வேகமாக சுரந்தது. இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
'அச்சச்சோ.... கௌவுதம் பாத்தா நம்மள தப்பா நினைப்பான்' என்று இரு கால்களையும் தரையில் அழுத்தமாக ஊன்றி ஓரளவுக்கு படபடப்பைக் குறைத்தாள். கௌவுதம் முகத்தை பார்த்துவிடக் கூடாது என்று தலையை குனிந்து கொண்டாள்.
கௌவுதம் இதை விளையாட்டாகத்தான் செய்தான். கையை வளைத்துப் பிடித்ததும் வெண்ணிலா திமிறுவாள் கையை விடுங்க கௌவுதம் என்று சண்டையிடுவாள் என்றுதான் நினைத்தான். ஆனால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றாள். அவள் அமைதி அவனை ஏதோ செய்ய "வெண்ணிலா" என்றான். ம்ஹூம் பதில் இல்லை. இன்னும் சற்று அழுத்தமாக அழைத்தான் அப்போதும் அவள் நிமிரவில்லை என்றவுடன் மறுகையால் அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.
You can also check the stories by genre here.
Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here
M | Tu | W | Th | F | Sa | Su | |
---|---|---|---|---|---|---|---|
Mor AN Eve |
11 EVUT PVOVN NiNi |
12 MINN ILU MAMN |
13 VD EMPM KIEN |
14 VMKK KK KaKa |
15 Sush UVME Enn |
16 Siva NKU Tha |
17 KI VTKS EK |
Mor AN Eve |
18 EVUT - NiNi |
19 MMSV ILU MAMN |
20 GM EMPM KIEN |
21 ISAK KK KaKa |
22 EU UMIN EYPI |
23 Siva NKU Tha |
24 KI VTKS EK |
* Change in schedule / New series
* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in