வெண்ணிலா கண்களை விரித்து காதலுடன் கௌவுதமைப் பார்த்தாள். கௌவுதமிற்கு வெண்ணிலாவின் கண்களில் தெரிவது என்ன என்று சத்தியமாகப் புரியவில்லை. ஆனால் ஏனோ அந்தக் கண்களை விட்டு அவனால் பார்வையை அகற்ற முடியவில்லை. பார்க்க பார்க்க ஏனோ அந்தக் கண்களுக்குள்ளேயே தான் ஆழமாய் விழவதுபோல் ஒரு பிரம்மை.
இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் இருந்தனர். எங்கோ எதுவோ கீழே விழுந்து உடையும் சத்தத்தில் இருவரும் சுயஉணர்வு அடைந்தனர்.
'அச்சச்சோ.... கௌவுதம ஏதாவது சொல்லி திசதிருப்பனும் இல்லன்னா அவன் கண்டுபிடிச்சிடுவான். அப்புறம் அசிங்கமாப் போயிடும்' என நினைத்த வெண்ணிலா "அது..அது... வந்து.. ம்ம்.. ஆமா. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்" என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.
கௌவுதமும் தான் இயல்பாய் இருப்பதைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ால்லு. எப்போ கல்யாணம்" என்றார் சற்று அழுத்தமாக.
பொதுவாக கார்த்திகா சீரியசாக பேசுபவர் கிடையாது. எப்போதாவதுதான் அவர் குரல் அழுத்தமாக ஒலிக்கும் அப்படி ஒலித்தால் அவருக்கு சரியான பதில் வேண்டும் என்று அர்த்தம். அதனால் பிரணவ் சற்று யோசித்து "எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கம்மா" என்றான்.