கார்த்திகாவும் சிறிது யோசித்து "ம்ம்... சரி ஆனா ரொம்ப நாள் எல்லாம் கொடுக்க முடியாது. உனக்கு இரண்டு மாசம்தான் டயம் அதுக்குள்ள என் மருமகள என்கிட்ட காட்டுற இல்லாட்டி இன்னும் இரண்டு மாசம் டயம் எடுத்து உன் வருங்கால மனைவி யார்னு நான் முடிவு பண்ணி அவள உன்கிட்ட காட்ட வேண்டியதாகிடும் பாத்துக்கோ பிரணவ் கண்ணா" என்று அவன் கண்னத்தை தட்டிவிட்டு சென்றுவிடடார்.
விட்டால்போதும் என்று பிரணவ்வும் எஸ்டேட்டிற்கு கிழம்பிவிட்டான்.
காரில் செல்லும்போது பிரணவ்விற்கு "இன்னும் இரண்டு மாதத்திற்குள் மித்ராவிடம் காதலைச் சொல்லி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிட முடியுமா" என்று ஒரே யோசனையாக இருந்தது.
மித்ரா தன்னை சகோதரனாய் நினைக்கவில்லை என்று பிரணவ்விற்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அவள் தன்னை காதலனாகவும் நினைக்கவி
...
This story is now available on Chillzee KiMo.
...
்தான் வீட்டிற்கு வருவான். ஆனால் இப்போது அவர்கள் நால்வர் மட்டும் அதிகாலையிலேயே வெளியில் செல்கிறார்கள் இரவும் தாமதமாக வருகிறார்கள். கௌவுதம் வீட்டிலேயே இருக்கிறான். இங்கு என்ன நடக்கிறது வெண்ஸ்'
'எனக்கும் ஒன்னும் புரியல வெண்ணிலா. ஆனா இதுயெல்லாம் நல்லதுக்கு இல்லன்னு மட்டும் புரியுது'