அவன் ஆபிஸ் அறையில் இருந்த அலமாரி... அந்த போட்டோ...
எதனால் அதுவரை யாரும் திறத்து பார்திராததை அவன் பார்த்தான் என அவனுள் எழுந்த கேள்விகள்...
எல்லாவற்றிருக்கும் விடைகள் தானாக கிடைத்து விட்டதாக தோன்றியது!
கோபி சரண்யாவின் எதிர்காலத்திற்காக மறைமுகமாக கொடுக்கும் செய்தி தானா அது...
இதெல்லாம் சாத்தியமா??? அல்லது எல்லாமே மைத்ரேயி சொல்வது போல முட்டாள் தனமான எண்ணங்களா???
ஜெர்மன் எழுத்தாளர் ஜெர்மன் ஹெசி சொன்னதாக எப்போதோ படித்த வரிகள் அவனுக்கு நினைவுக்கு வந்தது...
எப்போதுமே, ஞானி ஒருவர் கொடுக்க நினைக்கும் ஞானம், ஒரு சிலருக்கு முட்டாள்த்தனமானதாக தான் தோன்றும்!
ஞானம் எது, முட்டாள்தனம் எது எனபது எல்லாம் அவரவர் நம்பிக்கையை, விருப்பத்தை, பார்வையை பொறுத்த விஷயங்கள் தானே...
...
This story is now available on Chillzee KiMo.
...
ோம்... இப்போது வந்து இதை கேட்கிறாயே, நீ என்ன லூசா? என்ற பாவனையுடன் மைத்ரேயி பார்க்க....
சரண்யா மனதில் இருந்த வலியை மறைக்க முடியாமல், கண்களிலும் அதே வலி எட்டி பார்க்க அவனை பார்த்தாள்...
மித்ரனுக்கு இருவரின் பார்வையின் பொருளும் புரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், சரண்யாவிடம்,