மனைவி இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் போகிறேன் என்று சும்மா மிரட்டுகிறாள் என்றுதான் கருப்பையா நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் சிவரஞ்சனி கையில் பெட்டியுடன், கூடவே குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வரவும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான்.
அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் வாசலை நோக்கி செல்வதைக் கண்டதும் அவனும் பின்னேயே ஓடினான்.
"ஏய் என்னடி பண்றே? ராத்திரி நேரத்தில் பிள்ளைங்க அழைச்சுக்கிட்டு எங்கே கிளம்பிட்டே? பேசாமல் உள்ளே போடி.”
அவள் சிரித்தாள்.
"ஏய் என்னடி நக்கலா சிரிக்கிறே? இந்த நேரத்தில் வீட்டுக்குப் போனால் அத்தையும், மாமாவும் என்ன நினைப்பாங்க? உனக்கு உங்க வீட்டுக்குப் போகனும்னா நாளைக்குப் போகலாம். இப்ப உள்ளே போ.”
அவள் அப்படியும் உள்ளே போகாமல் நின்றிருந்தாள்.
“என்னடி சொல்லச் சொல்ல அப்படியே நின்னுக்கிட்டிருக்கே? போறதாயிருந்தா நீ மட்டும் போடீ. என் பிள்ளைங்களை விட்டுட்டுப்போ.“
அவளிடம் பேசிக்கொண்டே அவளின் இடுப்பில் இருந்த ஆரவைப் பிடுங்கினான்.
அவன் பிடுங்கிய வேகத்தில் அவள் கையில் இருந்த பெட்டி கீழே விழுந்தது. இரண்டு பிள்ளைகளையும் தன்னிடம் வைத்துக்கொண்டவன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் உள்ளே சென்று கொண்டிருந்தாள்.
“ம். அந்தப் பயம் இருக்கட்டும்.“
பெருமையுடன் கீழே விழுந்த பெட்டியை எடுக்கக் குனிந்தவன் திகைத்தான்.
அந்தப் பெட்டி திறந்து உடைகள் கீழே சிதறியிருந்தன. அதில் அவனது உடைகளும், குழந்தைகளின் உடைகளும் மட்டும்தான் இருந்தன.
அவன் அவசரமாகத் திரும்பி மனைவியைப் பார்க்க அவளோ கதவைச் சாத்திக் கொண்டிருந்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அது இரும்புக் கம்பியிலான கதவு என்பதால் அவளைப் பார்க்க முடிந்தது.
அவள் உண்மையிலேயே அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ஏய். என்னடி பண்றே? பனிச்சாரல் பிள்ளைங்களுக்கு ஒத்துக்காது. சீக்கிரம் கதவைத் திறடி.“
அவள் அவன் பேசவேயில்லை என்பது போல் நின்றிருந்தாள்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சரவணனும், மேனகாவும் அவளது பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்தனர்.
வீட்டில் பிரபாகரன்தான் இருக்கிறான். தங்கள் பிரச்சினைக்குக் காரணமே அவனும், அவனுடைய மனைவியும்தானே? அதனால் தங்கள் பிரச்சினைப் பற்றி அவனுக்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாகயிருந்தான்.
இப்போது என்ன செய்வது என்று யோசித்தவன், தன் தந்தையை அழைத்தான்.
மகன் அந்த நேரத்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டது சண்முகத்தை ஆச்சர்யப்படுத்தியது.
“என்னப்பா? இந்நேரத்துக்கு நீ வீட்டுக்கு வராமலா இருக்கே? எங்கேயிருந்து போன் பண்றே?“
“நான் வீட்டு வாசலில் இருந்துதான் பேசறேன்ப்பா. கொஞ்சம் வந்து கதவைத் திறங்க.“
“ஏன்ப்பா? அதுக்குள்ளயுமா சிவாப் பொண்ணு தூங்கிடுச்சு?“
“அப்பா அதெல்லாம் அப்புறம் சொல்றேன்ப்பா. முதல்ல நீங்க வாங்க.“
“யாருங்க போன்ல?“
வடிவு கேட்டாள்.
“நம்ம கருப்பையாதான்.“
“அவன் இன்னமும் வீட்டுக்கு வராமல் அப்படி என்ன பண்றான்?“
“வீட்டு வாசல்லதான் நிற்கிறானாம்.“
“அப்புறம் சிவாவைக் கூப்பிட வேண்டியதுதானே? அவ என்ன அதுக்குள்ளவா தூங்கிட்டா? கருப்பு வராமல் அவள் படுக்க மாட்டாளே? என்னாச்சுங்க?“
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
(வினோதா) பிந்து வினோத்தின் "என்றென்றும் உன்னுடன் 01..." - காதல் கலந்த குடும்ப தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“சும்மா தொணதொணக்காமல் வர்றியா? நானே என்ன நடந்துச்சன்னு தெரியாமல் இருக்கேன்? கல்யாணம் ஆனதிலிருந்து அவர்களுக்குள்ளே எந்த பிரச்சினையும் வந்ததில்லை. அந்தப் பொண்ணு என்னிக்குமே நல்லவிதமாத்தான் நடந்திருக்கு. பணக்கார வீட்டுப் பொண்ணுன்னு ஒரு நினைப்புக்கூட இல்லை. இப்ப அதுவும், இந்த ராத்திரி நேரத்தில் என்னாச்சுன்னு தெரியலையே. வா போகலாம்.“
அவர்கள் இருவரும் விரைந்தனர்.
அங்கே கதவு பூட்டியிருக்க, கருப்பையாவும், குழந்தைகளும் வெளியே நின்றிருந்தனர். அருகே அவர்களது பெட்டியும்.
அங்கே சிவரஞ்சனியைக் காணவில்லை.
“என்னாச்சுப்பா? நீங்க வெளியில் வந்ததை யாரும் கவனிக்காமல் பூட்டிட்டாங்களா? அப்படின்னாலும் பெட்டி எதற்கு? ஒருவேளை நீ எங்கேயும் வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டிருக்கியா? பிள்ளைகள் உன்னோட வர்றேன்னு அடம் பிடிக்கிறாங்களா?“
You can also check the stories by genre here.
Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here
M | Tu | W | Th | F | Sa | Su | |
---|---|---|---|---|---|---|---|
Mor AN Eve |
11 EVUT PVOVN NiNi |
12 MINN ILU MAMN |
13 VD EMPM KIEN |
14 VMKK KK KaKa |
15 Sush UVME Enn |
16 Siva NKU Tha |
17 KI VTKS EK |
Mor AN Eve |
18 EVUT - NiNi |
19 MMSV ILU MAMN |
20 GM EMPM KIEN |
21 ISAK KK KaKa |
22 EU UMIN EYPI |
23 Siva NKU Tha |
24 KI VTKS EK |
* Change in schedule / New series
* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in