அவன் இல்லையென்று தலையாட்டினான்.
“சிவா எங்கே?“
“அவ அறையில் இருக்கா?“
தான் போய் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள் வடிவு.
அங்கே சிரஞ்சனி தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு சிவா? தலையை வலிக்குதா?“
மாமியாரின் குரல் கேட்டு நிமிர்ந்தாள். அவள் எதிர்பார்த்துபோல் மாமியார் வந்துவிட்டாள். கணவன்தான் அவர்களை அழைத்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும்.
அவன் பேசிய பேச்சுக்கு அவள் கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்து அவர்களை அழைத்திருக்கிறான். அவர்களிடம் அவள் எந்த வேறுபாட்டையும் காண்பிக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.
“கருப்பு மாமா. உனக்கு இந்த அளவுக்குத் தெரிந்தால் எனக்கு அதைவிட தெரியும். இரு உனக்கு வச்சிருக்கிறேன்.“
மனதிற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ி நீ இங்கே வரனும்னா உன் புருசனோட தான் வரனும்னு சொன்னாங்க மாமா. அவங்க சொன்னது சரிதானே?”
“சரிதான்மா. உன்னைப் பெத்தவங்க உனக்கு நல்லதைத்தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க. நான்தான்மா தப்பு பண்ணிட்டேன். என் பிள்ளைக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சு கண்டிக்க மறந்துட்டேன். இனி இப்படி நடக்காதும்மா.”