அதுவும் அவளது கோபத்தை அதிகப்படுத்தியது.
விறைப்பானாள்.
“ஏய் சும்மா இருடி. மனுசனுக்கு இப்பத்தான் மூடு வந்திருக்கு. அதைக் கெடுத்துக்கிட்டு இருக்கே?”
அவள் பேசவில்லை. ஆனால் அவள் கண்ணீர் பேசியது. அவளது கண்ணீரைக் கண்டதும் அவன் பதறிப் போனான்.
“ஏய் என்னடி அழறே?”
“இவளுக்குப் போக்கிடம் இல்லைன்னு தெரிஞ்சுதானே என்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னீங்க? இப்ப எதுக்கு வந்து குழையறீங்க?”
“ஏய். உனக்கு போக்கிடம் இல்லைன்னு நான் வெளியே போகச் சொன்னேனா? நீதானேடி என்னையும், என் பிள்ளைங்களையும் வீட்டை விட்டு வெளியில் வச்சு பூட்டினே. இப்ப வேற மாதிரி பேசறே?”
“வீட்டை விட்டுப் போக முடியாதபடி என் அம்மாதான் என்னைக் கட்டிப்போட்டுட்டாங்களே. எங்கே நான் உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டு அங்கே ப
...
This story is now available on Chillzee KiMo.
...
் இல்லை. அதனால் எதையும் கண்டும் காணாமல் போய்க்கிட்டிருக்கே. ஆனால் அந்த மாலதிக்கு இந்தக் குடும்பம் பற்றிக் கவலை இல்லை. சொத்துதான் பெரிசா இருக்கு. என் தம்பி ஏற்கனவே குடும்பத்தோடு ஒட்டாமல்தான் இருந்தான். அவனுக்கு வாய்ச்ச மனைவி சொந்தம் வேணும்னு நினைச்சிருந்தால், அவன் நம்மோட ஒத்து வந்திருப்பான்.”