"கயல் உன்னை வருத்தப்பட வைப்பது என் எண்ணம் இல்லை. நீ என உயிர் கயல்.இப்போதும் இதை என் பாரமா தான் பார்க்கிறேன். என் நிலைமை உனக்கு புரிய வைக்கத்தான் சொல்லறேன். என் நேசம் நிஜம் கயல்.என் அன்பு நிஜம். உனக்கு சின்ன வருத்தம் கூட இருக்கக்கூடாது என்யறு தான் நினைததேன்."
அறிவழகன் மனம் புரியவில்லை. இதனால் நான வருந்தக்கூடாது என்று நினைக்கும் அவன் ஏன் பிரிய சொல்லி காயப்படுத்துகிறான். என்னவன் வாழ்வில் இத்தனை புயல் அறியாமலேயே இருந்து விட்டேன்.அவனோடு நின்று அவனுக்கு தோள் கொடுக்க முடியவில்லையேபாரமானது மனது. அவன் தோள் சாயந்தேன்.எத்தனை நேரம் சென்றது தெரியவில்லை. கண்ணீர் நனைத்த கன்னம் காய்த்து இருந்தது.அடுத்தது என்ன.அவனை பிரியக்கூடாது.இத்தனை நாட்கள் எப்படியோ.இனி அவனுக்கு துணை நிற்க வேணடும்.என் அமைதி சந்தோஷம் மட்டுமே அவன் இலட்சியமாய் நினைக்கும் அவன் ஒரு புதையல். அவன் அன்புக்கு என்ளறும் அடிமையாய் அவனோடு துணை நிற்க வேண்டும்.
"அறிவழகன் உங்க தோள் சாயும் இந்நேரம் உங்களுக்கு எப்படி இருக்கு?"
"கயல் உனக்காக தோள் கொடுப்பது எப்போதும் இனிமை தான கயல்"
"இந்த இனிமை வாழ்க்கை முழுதும் வேண்டாமா?உங்களுக்கு?எனக்கு வேண்டும்"
என் கண்கள் நோக்கி அவன் ஏதோ கூற எத்தனிக்க.. அவன் வாயை என் கைகளால் மூடினேன்.
"நான் சொல்ல வருவதை கேளுங்க.ப்ளீஸ். உங்க வலிகள் எனக்கு புரியுது.உங்க கடமைகள் உங்கசூழ்நிலை எலலாம் புரியுது உங்க சுமைகளை நான சுமக்க கூடாதுனஅனு நினைக்கறீங்க து கூட சரி.ஆனால் ஒரு ஆதரவா நான இருக்க கூடாதா.உங்களுக்குக்காக நான காத்திருக்கேன் அறிவு.உங்களை என்னால் இழக்க முடியாது.நீங்க வாழ்க்கையில் மோதிக்கொண்டிருக்க உங்களை தனிமை படுத்த முடியாது என்னால். நம் காதல் உணர்வு தூரங்களுக்கு அப்பாற்பட்டத. காலமும் தேசமும் தாண்டிய உறவு இது.என்னால் உங்களை மறக்க முடியாது .என்றைக்கும் உங்க கயல்விழி யா உங்க தோள் சாய்ந்து உங்க கூட சண்டை போட்டு உங்களை இம்சிக்கும் கயலா தான் இருக்க விரும்பறேன். என்னை விலக்காதீங்க ப்ளீஸ்"
கண்களில் நீர்முத்துகள் கோர்க்க தன் கைகளால் என் கன்னம் பற்றி "கயல் நீ என் பொக்கிஷம் டீ"என்று என் முகத்தை இழுத்து அவன் இதழ் என் இதழ் தேடி வரும் நேரம் ஏதோ நினைவு வந்தவனாய் பின்னோக்கி நகர்ந்தான். சட்டென்று அவன் கைபிடித்து என் கன்னங்களில் பதித்து கொண்டேன்.
"அறிவு இந்த நொடி நீங்க உங்க காதலை மறைக்காதீங்க ப்ளீஸ்"
கன்னம் தாண்டிய கண்ணீரை துடைத்துவிட்டு என் இதழ் மீது அவன் இதழ் பதித்து சின்னதாய் ஒரு தவம் செய்தான். எத்தனை நாள் ஏங்கிய முத்தம். சட்டென்று தவம் கலைத்தவன் இருக்கையிலிருந்து எழுந்து சற்று தள்ளி திரும்பி நின்றான்
"சார் கயல்"
அவன் மனப்போராட்டம் எனக்கு புரிந்தது.என் காதல் தான் அவனுக்கு புரியவில்லை. அவன் முதுகில் முகம் புதைத்தேன்.
"சார் சொல்லாதீங்க.. லவ் யு சொல்லுங்க அதானே உண்மை"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அனைத்த என் கைகளை விடுவித்து கொண்டான்.
"கயல் என் முடிவில் நான் தெளிவாக இருக்கேன்.நீ எனக்காக காத்திருப்பது சரியில்லை. நீ மாறமாட்ட கயல் ஆனால் இந்த பிரிவில் நான மாறிவிட்டா?அப்புறம் கட்டாய காத்ல் ஆகிடும்"ஏதேதோ பேசினான்.இதெல்லாம் அவனை நோக்கி முன்னேறும் என்னை தள்ளி செல்ல செய்யும் யுக்தி.என் கைகள் அவனை தொடும் தூரம்.இன் அவனை விடக்கூடாது என இறுக்கி அனைத்து கொண்டேன்.தன்னை விடுவிக்க போராடிய அவன் தோற்று போனான்.அவன் தோல்வியை ஏற்கும் வகையில் மெல்ல அவன் கைகள் என்னை அனைத்தது.அவன் மூச்சுக்காற்று என் காதில் சுட்டது. காதலால் அவன் இதயம் துடிப்பது என் காதில் நன்றாய் கேட்டது.கழுத்தில் இதழ் பதித்தான். அவன் கைகள் என் இடையில் கோலம் போடும் நேரம் வெட்கம் என்னை சீண்டியது. என்னை விடுவித்து கொண்டேன்.சற்றும் எதிர்பாராவிதமாய் என்னை இழுத்து அனைத்து கொண்டான். கலைந்த என் கூந்தல் ஒதுக்கி கழுத்தில் இதழ் பதித்தான்.என் கையில் ஒரு முத்தம். உடல் சிலிர்த்தது. மேலும் முன்னேறி என் தோள் தொட்டான் அவன் இதழ்களால்.அவன் கைகள் என் பெண்மை எழுப்ப பயணப்பட்டது.துடித்தேன்.சிலிர்த்தேன்.ஆறுதலாய் என் இடை வளைத்து இதழ் பருகினான்.
இன்பத்தழுவல்கள் இம்சையான இனிமைகள். இந்த காதல் மழையில் என் வெட்கம் எங்கோ கரைந்து போனது.
"நம் காதலை முழுமை படுத்துவோமா?"மெல்ல முனகினேன்.வெட்கம் கலைந்து ஆடை கலைய அனுமதி கேட்டேன். ஏங்கி கிடந்த சொல் ஒன்று காதில் விழுந்தது.என் உயிர் அப்போது நின்றிருந்தால் கூட ஆனந்தமாய் தான் இருந்திருக்கும்
"ஐ லவ் யு கயல்"மெல்ல தான் சொன்னான்.இந்த வார்ததைகள் என் நெஞ்சு நிறைக்க எங்களுக்குள் எழுந்த காத்ல தீ க்கு எண்ணெய் ஆயிற்று.ஆடைகள் மேல் எங்கள் கைகள் போகும் நேரம் சட்டென்று விலகி நின்றான்...... அவன் கண்ணில் கலக்கம்....சிலையானேன். மோகத்தின் உச்சியில் நின்று கொண்டு தவித்த என்னை புரிந்து மறுமுறை தழுவி கொண்டான்.