மகாலெட்சுமி உற்சாகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
இன்றுடன் அவள் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.
தந்தையின் புகைப்படத்தின் அருகே சென்றவள் சம்பளப்பணத்தை எடுத்து வைத்தாள். கண்களை மூடி தந்தையுடன் பேச ஆரம்பித்தாள்.
அப்போது அங்கே வந்த சிவரஞ்சனி மகளைத் தொந்தரவு செய்யாமல் நின்றாள்.
கண்களை திறந்தவளின் எதிரே புன்னகையுடன் சிவரஞ்சனி நிற்பதைக் கண்டவள் ஆவலுடன் அம்மா என்று அணைத்துக் கொண்டாள்.
அதன் பிறகு பையில் இருந்த இனிப்பை எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கிய சிவரஞ்சனி மகளின் வாயில் ஊட்டிவிட்டாள்.
"என்னடா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கே. உனக்கு அந்தளவுக்கு வேலை பிடிச்சுப் போச்சா?"
"ஆமாம்மா."
கண்கள் பள
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வேலையை விட்டுவிட்டு வேறிடம் சென்றால் அவனை விட மோசமானவர்கள் இருந்தால் என்ன செய்வது?
சந்தானம் மகா பில்டர்சின் உள்ளே வந்தார்.
தங்கள் அறைக்குள் நுழைந்தவர் அங்கிருந்த கருப்பையாவின் புகைப்படம் மாலையில்லாமல் இருப்பதைக் கண்டார்.