அதை கண்டதும் அவள் விடை 100% சரிதான் என்று மனதுக்குள் புன்னகைத்தாள்...
நந்தினியும் தன் கப்பை எடுத்து கொள்ள, பவித்ரா திரும்பி நடந்தாள்..
“ஒரு நிமிடம்.. “ என்ற நந்தினியின் குரலை கேட்டு திகைத்து நின்றாள் பவித்ரா...
பவித்ரா இங்கு வந்ததில் இருந்து அனைவரும் அவளுடன் பேசியிருந்தார்கள்... ஏன் சரோஜா கூட அவளுடன் நன்றாகத்தான் பழகினாள்..
ஏனோ இந்த நந்தினி மட்டும் அவளிடம் முறைத்து கொண்டே எட்டி நின்றாள்... அப்படிபட்டவள் தானே தன்னிடம் பேச வரவும் திகைப்புடனும் ஒரு வித ஆர்வத்துடனும் நின்றவள் திரும்பி நந்தினியை பார்த்தாள்..
அந்த நந்தினியோ பவித்ராவை மேலும் கீழும் பார்த்து
“உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கு.. “ என்றாள் நக்கலாக
பவித்ராவும் எதுக்கு பாவம் என்று புரியாமல் நந்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரித்தாள் நந்தினி...
“ஹ்ம்ம்ம் இதுக்குத்தான் கல்யாணம் ஆன உடனே புருசனை கைக்குள்ள போட்டுகணும்ங்க்றது.. வரட்டு கவுரம் பார்த்துகிட்டு தள்ளி வச்சா ஆம்பளைங்க இப்படிதான் அடுத்த இடத்தை தேடி போய்டுவாங்க... நானெல்லாம் அப்படி இருக்க மாட்டேன் பா... “ என்று அவள் இன்னும் வெக்கபட்டு சிரித்தாள்..