பவித்ராவோ அவள் சொன்ன கன்றாவதி கதை எல்லாம் கேட்டு பல்லை கடித்தாள்... ஆனாலும் அவள் கஷ்டபட்டு தன் முகத்தில் எதையும் காட்டி கொள்ளவில்லை...
எதிரியிடம் நம் பலவீனத்தை முகத்தில் காட்டினால் அதுவே அவங்களுக்கு வெற்றி பெற்றதாக இருக்கும்... என்று எண்ணி அவள் தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் கட்டுபடுத்திக் கொண்டிருந்தாள்...
அதோடு நந்தினியை ஒரு ஆழ்ந்த பார்வை மட்டும் ஒன்றை செலுத்தி திரும்பி நடந்தாள்....
பவித்ராவின் நடவடிக்கையை கண்டு நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது...
“நான் சொன்னதை எல்லாம் வைத்து பவித்ரா கோபமாவாள்... கத்துவாள்.. ஏதாவது உளறுவாள்.. அதை வச்சு அவளுடைய அடுத்த மூவ் ஐ திட்டமிட்டிருந்தாள் நாந்தினி... ஆனால் இந்த குட்டச்சி எதுவும் பேசாமல் போறாளே..அதுவும் பெட்ரூமில் நெருக்கமாக தங்களை பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
் இந்த மாதிரி செவ்வக வடிவத்துல அதை தட்டணும்.. இதுக்கு பேர் மாவு சானை ...
இந்த மாதிரி இரண்டு செய்து அதை ஒரு பெரிய தாம்பாளத்துல வைத்து அதன் மேல் கலர் கலரா மெழுகுவர்த்தி வச்சுக்கலாம்.. அப்புறம் தேங்காய், பழம் வெத்திலை சாமிக்கு மாலை னு எல்லாம் வைத்து அந்த மாவிளக்கு தட்டை அழங்கரிக்கணும்..