(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 05 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

விருப்பம் இல்லை என்றாலும், கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னது தன் பெற்றோருக்காக தானே என்று தன் மனதை அவள் சமாதானம் செய்து கொள்ளப் பார்த்தாள் ஆனாலும் முடியவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து.

தன் அறையில், laptopல் அன்று எடுத்த சில போட்டோக்களின் editing வேளை செய்து கொண்டிருந்தான் ரகு.

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு தலையை நிமிர்த்த “நான் தான் ரகு பால் எடுத்துட்டு வந்துருக்கேன்” என்று தன் தாயின் கூறல் கேட்டது.

“வாங்க மா. கதவு திறந்துதான் இருக்கு” என்றான் ரகு.

பானுமதி பால் டம்லரோடு உள்ளே நுழைந்தார். 

“அம்மா, கூப்பிட்டிருந்தா நான் வந்து எடுத்திருந்திருப்பேன் இல்ல. எதுக்கு நீங்க” என்றான் ரகு அக்கறையோடு.

“அதற்கு என்ன பா, நீ எதோ முக்கியமான வேளையில் இருப்ப” என்றார் பானுமதி.

“நீங்க சாப்பிட்டிங்களா, நைட் சாப்பிட வேண்டிய மாத்திரை சாப்பிட்டீங்களா” என்றான் ரகு.

“மாத்திரை காலி ஆயிடுச்சி பா. நாளைக்குத் தான் டாக்டர் கிட்ட போகனும்” என்றார் பானுமதி.

“மாத்திரை காலி நா என் கிட்ட சொல்லிருக்காலாம் இல்ல மா. நான் வரும் போது வாங்கிட்டு வந்திருப்பேனே” என்றான் ரகு.

“இல்ல பா, இந்த முறை எடுத்துக்கிட்ட மாத்திரையில் கொஞ்சம் கூட வலி குறையலா. அதுனால இந்த முறை டாக்டர பார்த்திட்டு தான் வேற மருந்து வாங்கனும்” என்றார் பானுமதி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்ன மா சொல்றீங்க. வலி குறையலனா வேற ஒரு நல்ல டாக்டர பார்க்கலாம் மா. நான் வேணுனா எதாவது ஒரு பெரிய hospitalல appointment வாங்கட்டுமா” என்று தன் தாயின் உடல் நலனில் அக்கறையோடு கேட்டான் ரகு.

“இல்ல டா ரகு, அதெலாம் ஒன்னும் வேண்டாம். இந்த தடவப் போன பிசியோ தேரோபி எழுதி தருவாறு. அது பண்ணா வலி கொரஞ்சிரும்.” என்று வேறு டாக்டரை பார்ப்பதற்குப் பயந்து சப்பக் கட்டு கட்டினார் பானுமதி.

“என்னமோ மா, நீங்க டாக்டரா இல்ல அவரு டாக்டரா நு தெரியல. நாளைக்கு மறக்காம டாக்டர் கிட்டப் போங்க. இந்த தடவையும் வலி சரியாகலனா கண்டிபா நாம வேற டாக்டர் பார்த்துத்தான் ஆகனும்” என்றான் ரகு கண்டிப்பாக.

“சரி டா” என்றார் பானுமதி.

பேசிவிட்டு தன் வேளையில் மூழ்கத் தயாரானான் ரகு. பானுமதிக்கு எப்படி பேச்சைத் தொடங்குவது என்று சிறு சந்தேகம்.

“ரகு, அது வந்து” என்று இழுத்தார் பானுமதி.

“சொல்லுங்க மா. எதாவது வேணுமா” என்றான் ரகு.

“அது…, வந்து” என்று சற்று இழுத்து விட்டு “என்ன முடிவு பண்ணிருக்க” என்றார் பானுமதி.

அவர் எதைப் பற்றிக் கேட்கிறார் என்று சிறிதும் ரகுவிற்கு விளங்கவில்லை. “என்ன மா எதை பற்றி கேட்குறீங்க” என்றான் சந்தேகமாக.

“உன் கல்யாணத்தை பற்றித்தான் ரகு” என்றார் பானுமதி.

ரகுவிற்கு அந்த வார்த்தையை கேட்டா உடனே ஒரு மாதிரி ஆனது. “அம்மா, மறுபடியும் ஆரமிச்சிட்டிங்களா. நடுவுல கொஞ்ச நாள் அமைதியா இருந்தீங்க. இப்போ” என்று ஒரு வெறுப்போடு பேசினான்.

“ஆமா ரகு நீ சொல்றது சரிதான். கடைசி ஒரு வருசமா உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நாங்க அமைதியா இருந்தோம்” என்று மட்டும் சொல்லி நிறுத்தினார் பானுமதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கண்ணம்மாவின் " உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அப்போதுதான் அவனுக்கு மறந்தது நினைவுக்கு வந்தது. கல்யாணத்தை தல்லி போட ஒரு வருடம் கெடு வாங்கியது நினைவுக்கு வந்தது. பதில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.

பானுமதியும் அவனையே பார்த்தவாரு அமைதியாக அமர்ந்திருந்தார், அவனது அமைதியே அவருக்கு உணர்த்தியது அவன் வாழ்க்கையில் எந்த பெண்ணும் இன்னும் வரவில்லை என்று.

“ரகு உன் அமைதியின் காரணம் எனக்குப் புரிகிறது. கல்யாணம் அது இது நு உன்னைக் கட்டாய படுத்துறோம் நு எங்க மேலே வருத்தம் படாதே. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு. வாழ்க்கையில் எல்ல விஷயமும் அந்த அந்த கால கட்டத்தல நடந்து ஆகனும். யாருக்காகவும் எதுகாகவும் நேரம்  நிற்கப் போவது இல்லை.” என்று சற்று நிறுத்தினார் பானுமதி.

ரகுவும் அமைதியாகவே இருந்தான்.

“எனக்கு உடம்பு முன்ன மாதிரி இல்ல பா ரகு. எனக்கு எதாவது ஒன்னு ஆகுரதுக் குல்ல உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்கனும் நு ஆச படுறேன்” என்று அவர் முடிப்பதற்குல் “அம்மா என்ன மா இது. உனக்கு உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா இருங்க.” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.