அதன் பிறகு கண்மணிக்கு சத்தான சாப்பாடாக சமைத்துக் கொடுத்தாள்.
உளுந்து களி, நல்லெண்ணெய் நாட்டு முட்டை அவளது உணவில் இருக்குமாறு பார்த்துக்கொண்டாள்.
அருணும், கண்மணியும் நன்றாகப் பழக ஆரம்பித்துவிட்டனர்.
சிவரஞ்சனியும் வந்து பார்த்துக் கொண்டாள்.
பதினாறாம் நாள் எளிமையாக சடங்கு வைப்பதாக முடிவெடுத்தனர்.
கௌதமின் சகோதரிகளுக்கு சொல்லிவிட்டான். மூத்த சகோதரி, தனது நாத்தனாரான கண்மணியின் அம்மாவை அழைக்க வேண்டும் என்று வம்பு பண்ணினாள்.
ஆனால் கௌதம் தெளிவாகச் சொல்லிவிட்டான்.
"அவ குழந்தை வேண்டாம்னுதானே விட்டுட்டுப் போனாள். அவகிட்ட போய் கெஞ்ச சொல்றியா?"
அதற்கு மேல் யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை.
கௌதமின் மூத்த சகோதரிக்கு தன் நாத்தனாரைப் பற்றி ஏற்கனவே தெரியும். அத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அதனால் வேறு வழியில்லாமல் பாலை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
அவன் அவளை எதிர்பார்த்திருந்து கட்டிலில் அமர்த்தலாக அமர்ந்திருந்தான்.
அவள் பாலை அவன் கையில் கொடுக்காமல் அங்கிருந்த மேசையில் வைத்தாள்.
"ஏய். பாலைக் கொண்டு வந்தால் புருசன் கையில் கொடுக்க மாட்டியா?"