அவள் அவனை முறைத்தாள்.
"ஏய் என்னடி முறைக்கிறே?"
"என்ன டீயா?"
"ஆமாடீ."
அவள் பேசாமல் பாலை தம்ளரில் ஊற்றி கணவனிடம் நீட்டினாள். அவன் பாலைப் பருகிவிட்டு அவளிடம் தம்ளரை நீட்டினான்.
அவள் பல்லைக் கடித்துக்கொண்டே வாங்கி நங்கென்று வைத்தாள்.
"என்ன கோபம் பலமா இருக்கு. விட்டால் என் தலையை உடைச்சிடுவே போலிருக்கே."
கிண்டலுடன் கேட்டான்.
கட்டிலில் அமர்ந்தவள் தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
"ஏய் ராட்சசி. என்னை அடிக்காதடி. என் அப்பா அம்மா உன்னைப் போலபொண்ணுண்டான்னு கேட்கிறாங்க. நான்ல படாத பாடு படறேன்."
அவன் பேச்சை அவள் பொருட்படுத்தவேயில்லை. அடிப்பதையும் நிறுத்தவேயில்லை.
"ஏய் வலிக்குதுடி."
சிறிது நேரத்தில் விசும்ப ஆரம்பித்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ion: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}