“தேவி.. ச்சே யாதவி நேத்து எங்கக்கிட்ட வர்றதுக்கு முன்ன அவ வாழ்க்கையில் நடந்ததை பத்தி சொன்னா.. முழு விஷயமும் சொல்றதுக்குள்ள அவளோட அப்பா வந்து பிரச்சனை பண்ணிட்டாரு..”
‘என்ன சொல்ற மதுரிமா.. பன்னீர் அங்கிள் அங்க வந்தாரா?”
“ஆமாம் வந்து நீ என்கூட தான் இருக்கணும்.. நான் சொல்றதை கேக்கணும்னு ஒரே பிரச்சனை.. ட்ரிங்ஸ் வேற சாப்பிட்டிட்டு இருந்தாரு.. அப்போ அவர் பேசின விஷயத்தை வச்சு என்னால யாதவி லைஃப்ல நடந்ததை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.
அன்னைக்கு அவ விபாகரன் கூட நடக்க இருந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்திட்டு உங்களை பார்க்க தான் வந்திருக்கா.. அப்போ என்ன நடந்துச்சுன்னு நான் கேட்க விரும்பல.. ஆனா இப்போதும் யாதவி உங்களை நினைச்சிக்கிட்டு இருக்கான்னு தான் தோனுது.. எங்க பெரியம்மா அவ கல்யாணத்தை பத்தி பேசும் போதெல்லாம் வேண்டாம்னு தான் சொல்லுவா..
அவ உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்க சமயத்துல, உங்களுக்கும் சுஜனாக்கும் கல்யாணம்னு வந்த நியூஸ் கண்டிப்பா அவளுக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும், உங்க மேல கோபத்திலேயோ இல்ல வருத்தத்திலேயோ இருந்திருப்பா.. அதே சமயம் வேண்டாம்னு சொல்லிட்டு வந்த விபாகரனையும் உங்களையும் ஒரே நேரம் பார்ட்டில மீட் பண்றதை நினைச்சு அவளுக்கு கண்டிப்பா ஒருமாதிரி இருந்திருக்கும், அதான் பார்ட்டி நடந்து முடிஞ்சதுல இருந்து ஒருமாதிரி இருக்கா..
இத்தனை நாள் நீங்க யாதவியை நினைச்சிருக்கீங்க, தேடிட்டு இருந்திருக்கீங்கன்னு அன்னைக்கு பார்ட்டில நீங்க நடந்துக்கிட்டதே வச்சே தெரியுது.. இப்போ இனி என்ன செய்யப் போறீங்க? உங்களுக்கும் சுஜனாவுக்கும் இன்னும் ரெண்டு நாளில் எங்கேஜ்மெண்ட் நடக்க போகுது.. இப்போ நீங்க என்னத்தான் முடிவு செஞ்சு வச்சுருக்கீங்க? அவள் கேட்டதும்,
“யாதவியை பத்தி ஒன்னும் தெரியாம என்னோட வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நான் போக விரும்பல, ஆனா அப்பா என்னை கேட்காமலேயே இந்த கல்யாண விஷயத்தில் முடிவு எடுத்துட்டாரு.. எல்லா விஷயத்திலும் அவரோட முடிவுக்கு கட்டுப்பட்டது போல, இந்த விஷயத்திலும் கேட்பேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கார்..” என்றவன்,
சுஜனாவை பார்த்து, “சாரி சுஜனா, எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட இஷ்டமில்ல.. ஆனா அதை எப்படி உங்கக்கிட்ட சொல்றதுனு தயக்கம், எங்க உங்க மனசுல என்மேல விருப்பத்தை வளர்த்துப்பீங்களோன்னு தான் பயமா இருந்துச்சு.. அதான் உங்கக்கிட்ட பேச தயக்கம் காட்டினேன்..” என்றான்.
“அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் சாத்விக்.. சுஜனாவும் அஜயும் ஒருத்தரையொறுத்தர் காதலிக்கிறாங்க.. அஜய் இப்போ தான் சுஜனாக்கிட்ட ப்ரோபோஸ் பண்ணாரு.. சுஜனாவுக்கும் இதுல சம்மதம் தான், ஆனா அவங்க அப்பாவை நினைச்சு பயப்பட்றாங்க..” என்று மதுரிமா கூற,
“நிஜமாவா சொல்ற மதுரிமா.. கேட்கவே மனசுக்கு நிம்மதியா இருக்கு.. கவலைப்படாதீங்க ரெண்டுப்பேரும், உங்க கல்யாணம் நடக்கிறது என்னோட பொறுப்பு..” என்று சாத்விக் சொல்லவும்,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அனிதா சங்கரின் " காதல் காதலித்த காதலியை காதலிக்கும்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“நீங்கல்லாம் சொன்னாலும் எனக்கு பயமா இருக்கு.. உங்கக் கூட நடக்க இருந்த நிச்சயம் நின்னாலும், அப்பா அஜய் கூட எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க சம்மதிப்பாரா? அவர் ஒத்துக்கலன்னா என்ன செய்றது..” என்று சுஜனா கேட்டாள்.
“என்ன சுஜனா இது தேவையில்லாத பயம், அஜய் யாரு? சுதர்ஷன் க்ரூப் ஆஃப் கம்பெனியோட சென்னை ப்ராஞ்சோட மேனேஜிங் டைரக்டர்.. இப்போ உங்க அப்பா இவங்க கூட தான் பார்டனர் ஆகியிருக்காரு.. அஜயை நீ விரும்புறன்னு சொன்னா ஒத்துக்க மாட்டாரா? கூட மிஸ்டர் விபாகரன் இந்த கல்யாண விஷயமா பேசினா கூட போதுமே..” என்றவன்,
“என்ன அஜய் இதுக்கு மிஸ்டர் விபாகரன் ஒத்துக்குவாரா?” என்றுக் கேட்டான்.
“நாங்க ரிலேஷனா இருந்தாலும் அவர் என்கிட்ட அப்படி பழகினதில்ல.. என்கிட்ட ஒரு சி.ஈ.ஓ போல தான் பேசுவார்.. அவர் எனக்காக பேசுவாரான்னு தெரியலையே..”
“முதலில் நீ விஷயத்தை சொல்லு அஜய்.. விபாகரன் மட்டும் நமக்கு ஹெல்ப் செஞ்சா, உங்க கல்யாணமும் நடக்கும், நானும் யாதவியை கல்யாணம் செஞ்சுக்கலாம்.. அப்புறம் உன்னோட பேமிலில இதை ஒத்துப்பாங்களா?”
“விபாகரன் சார் ஓகே சொன்னா, அதை என்னோட அண்ணனும் ஒத்துப்பாரு.. அவர் ஒத்துக்கிட்டா அம்மாவுக்கும் ஓகே தான்..”
“அப்புறம் என்ன சீக்கிரம் விபாகரன் கிட்ட இந்த விஷயமா பேசு அஜய்.. எல்லாம் நல்லப்படியா முடிஞ்சா எங்க ரெண்டுப்பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிவு செஞ்சுருக்க இந்த தேதியில், உனக்கும் சுஜனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்..
அதுமட்டுமில்ல எங்கப்பா அடுத்து எந்த திட்டமும் போடாம இருக்க.. அன்னைக்கு எனக்கும் யாதவிக்கும் நிச்சயதார்த்தம் நடக்க நான் முடிவு செஞ்சுருக்கேன்..” என்று அவன் தீர்க்கமாக சொன்னதும்,
“சாத்விக் சூப்பர்.. இப்படி மட்டும் நடந்தா யாதவி ரொம்ப சந்தோஷப்படுவா.. இது யாதவிக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்..” என்று மதுரிமா கூறினாள்.
இவ்வளவு முக்கியமான விஷயத்தை யாதவியிடம் கலந்து செய்ய வேண்டும் என்பதை மதுரிமா தான் உணரவில்லை என்றால், சாத்விக்கும் அதை உணராமல் போய்விட்டான்.