இந்த வீட்டில் இருக்குற வரைக்கும் நான் மத்தவங்க பேச்சை கேட்டுத்தான் ஆகணும்.அது தான் என் தலை எழுத்து. ப்ளீஸ்.... என்னை நம்புங்க... நான் யாரோட வாழ்க்கையும் கெடுக்க மாட்டேன்.....
நானும் நல்ல குடும்பத்துல பொறந்த பொண்ணு தான். என்று கூறியவள் மீண்டும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
அவளது அழுகை க்ரிஷ் யை ஏதோ செய்தது..... தீடிர் என்று க்ரிஷ்ற்கு என்ன ஆனது என்று அவனுகேயே தெரியவில்லை....
நித்யாவை சட் என்று இழுத்து அணைத்து கொண்டான்.
எந்த ஒரு ஆறுதலும் இன்றி அழுது கொண்டு இருந்த நித்யாவும் க்ரிஷ் அணைத்ததும் மேலும் சப்தம் இட்டு அழ ஆரம்பித்தாள்.
க்ரிஷ் நித்யாவின் முதுகை ஆறுதலாக தடவி கொடுத்தான்.
ஆனாலும், அவளது அழுகை நின்ற பாடில்லை.பாவம், தன்னால் தானேயே இப்படி அழுகிறாள் என்று நினைக்கையில் அவனுக்கு தன் மீதேயே வெறுப்பு ஏற்பட்டது .
நித்யாவின் முகத்தை தன் கையில் ஏந்தினான். அவளது முகம் அழுது அழுது சிவந்து இருந்தது.
நித்யா, என்னை பாரு..... ப்ளீஸ்...... என்று கெஞ்சினான்.
நித்யாவும் அழுகையுடனேயே க்ரிஷ் யை பார்த்தாள்.
இனி... நீ சூழ் நிலை கைதியா வாழ தேவையில்லை....மத்தவங்க பேச்சையும் கேட்க தேவை இல்லை .... உனக்காக நான் இருக்கேன்..... என்னை ஏத்துக்கோ ப்ளீஸ்... என்று கூறியவன்....
அவளது இதழ்களை சிறை பிடித்தான். நித்யாவோ எதையும் உணர்ந்து கொள்ள முடியாத மோனா நிலையில் இருந்தாள்.
இவர்கள் இவ்வாறு இருக்க, வலி மருந்துடன் மாடிக்கு வந்த கீதா..... க்ரிஷ் யும் நித்யாவும் இருந்த நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்
கீதாவிற்கு, பின்னாடி வந்த ரிஷியோ இன்னும் பேரதிர்ச்சி அடைந்தான்
என்ன டீ உங்க தம்பி நித்யாவை அடிச்சுட்டாங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்த இவங்க என்னடான்னா மொட்டை மாடின்னு கூட பார்க்காம கிஸ் பண்ணிட்டு இருக்காங்க
உனக்கு கூட நான் இப்படி கிஸ் கொடுத்தது இல்லை டீ என்று ரிஷி அதாங்க பட்டுக்கொண்டான்.
கீதா, திரும்பி ரிஷியை முறைத்தாள்..... ரிஷியும் உடனேயே அமைதியானான்.
என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் என்று சத்தமாக கீதா கத்தினாள்.
அவளது, சத்தம் கேட்டு க்ரிஷுயும் நித்யாவும் அப்பொழுது தான் அவர்கள் செய்து கொண்டு இருந்த செயலையே அவர்களுக்கு புரிந்தது .
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}