தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 03 - கண்ணம்மா
மாமனின் மனைவியும் தாயின் உயிர்த் தோழியுமான கனிமாவின் நிலைகண்டு வருந்தியவள் முடிந்த வரை நான் அவங்கள நல்லா கவணிச்சிகணும் என்று மனதில் முடிவு செய்தாள்.
அவள் என்ன ஓட்டங்கள் எங்கெங்கோ தறி கெட்டு ஓட அவள் நிலையைச் சரி செய்யச் சிறிது நேரம் தேவைப்பட்டது. நினைவுகளைக் கலைத்து நிஜ உலகத்திற்கு அழைத்து வந்தது அவள் கைப்பேசி, சிணுங்கியதன் மூலம்.
ஹலோ...
........
சொல்லுங்கள் மாமா சாப்டிங்களா
.........
எதுவும் இல்ல மாமா அத்தை வாந்தி இதுவும் எடுக்கவில்லை நல்லா அமைதியாகத் தூங்குங்கள்.
........
சாப்பிட்டேன் மாமா
.....
ம்ம்ம்ம்... நீங்க ரீச் ஆயிட்டிங்களா நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. ரவி மாமா பிரச்சனையைச் சீக்கிரம் நல்ல படியா முடித்துக்கொண்டு வந்துடுங்க. உங்கள் டேப்லெட் பேக்ல ரைட் சைடு... என்று அவள் துடங்கும் முன்
சைடு ஜிப்ல மேலேயே எல்லாத்தையும் வைத்திருக்கிறாய் வைத்ததையும் அழகாக வைத்துவிட்டு அதுக்கு content காப்பி ஆட் காப்பி சாப்டு காப்பியையும் வைத்திருந்தாய் பார்த்துட்டேன் டா நன்றி டா என்று அவர் கூற
மாமா ஒழுங்கா தூங்குங்கள் குட்நைட் நன்றி சொல்கிறார்கள் நன்றி போங்க மாமா.
......
ம்ம்ம்... நான் சரி தான் மாமா... மாமா ஒழுங்கா தூங்குங்கள் குட்நைட்....
......
அத்தை நல்லாத்தூங்குறாங்க குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ். அத்துடன் அவர்களின் பேச்சு முடிவடைந்தது.
வீட்டு வேலை செய்யும் ராணி அவள் கணவர்க்கு விபத்து ஆனதால் அவசரமாக ஊருக்குப் போய்விட்டால். வீட்டில் நானும் அத்தையும் மட்டுமே. இந்த நிவி ஊருக்கு இப்போதுதான் போகவேண்டுமா பாவம் அத்தை. குறைந்தபட்சம் நானாச்சும் நேற்றே வந்து இருக்கலாம் அறை வந்து அமர்ந்தவள் அவர் படுத்திருந்த கட்டில் அருகிலேயே ஒரு சாய்வு நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்தபடியே பாண்டிமாதேவி கதையை வாசிக்க ஆரம்பித்தால். இவளும் கனி அம்மாவைப் போல அமரர் கல்கியின் வாசகி தான். எந்த ஒரு சத்தமும் இல்லை அவரிடம். கனி அம்மாவிடம் லேசாக கை கால் அசைப்பதாகத் தோன்றினாலும் கூட பார்ப்பாள். இவள் எழுந்து அவர் அருகில் சென்று தேவையைப் பார்த்துச் செய்தாள். நள்ளிரவு தாண்டியும் முழித்திருந்த அவள் உட்கார்ந்திருந்த வாக்கிலேயே தூங்கியும் போனாள்.
இரவு இரண்டு மணிக்கு வீட்டுக் கதவை யாரோ திறந்து உள்ளே வருகிறார்கள் தூக்கத்தில் கூட கனி அம்மாவின் மேல் கவனத்தை வைத்ததால் அவர் படுக்கையில் நெளிய எழுந்துகொண்டாள். கனி உண்ண உணவை இப்போது வாந்தி எடுத்து விட்டார் பௌவ் மேலேயே. அவள் சிறிதும் முகம் சுளிக்காமல் கனியை சுத்தம் செய்து சுடு தண்ணீர் அருந்த வைத்துப் படுக்க வைத்து விட்டு, தானும் சுத்தம் செய்து கொண்டாள். நைட் குளிக்காமல் ரொம்ப ஒரு மாதிரி இருந்தது அந்த குறை இப்போது உங்களால் தீர்ந்து போயிற்று தேங்க்யூ வெரி மச் அத்தை என்று சிரித்தாள். உறங்கும் கனி தூக்கத்திலேயே ம்ம் கொட்டச் சிரித்துக்கொண்டாள். அவர் உறங்கியதும் தானும் தன் பழைய இடத்திற்குச் சென்று அமர்ந்தாள்.
ஹாய்ய்.... என்று ஒரு இளைஞன் வழியை மறித்து நின்றான். எவ்வாறு இருக்கிறதாம் பெண் அவளுக்கு? குளித்துமுடித்து நைட்டியில் அதுவும் சர்ட்டன் வகை நைட்டி அணிந்து இருந்தமையால் சற்று ஒருமாதிரி ஆகிவிட்டது. குங்குமச் சிவப்பில் சாட்டின் நைட்டி பார்க்கும் எவர் கண்ணுக்கும் கொஞ்சம் இல்லை நிறையவே அப்படி இப்படி என்று தோன்றும். அவள் கனி அம்மாவுடன் தனியாக இருக்கப் போகிறோம் என்று தான் அதுவும் இரவு மட்டுமே அவர் உறங்கியது உறுதி செய்துகொண்டு உடுத்தியது. இப்போது இவன் யார் ஏன் இங்கு வந்தான் என்று யோசனை எல்லாம் இல்லை ஏன் இப்படிப் பார்த்து வைக்கிறான் மங்கூஸ் முழியைப் பார் ... என்றால் மனதினுள்.
ஹாய் என்று திரும்பவும் அழைக்க அவன் குரலைக் கேட்டு ம்ம்ம்... திரும்பவும் அவன் இருக்கும் உலகிற்கு வர, உம்ம்ம்ம்... சொல்லுங்கள் என்று குனிந்தபடி கேட்டாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்.
பசிக்கதம்மா ரொம்ப வழியில் எதுவும் சாப்பிடவில்லை சாப்பிட ஏதாவது இருக்கா என்று அவன் கேட்க அதன்பின் எதையும் யோசிக்காமல் நீங்கள் உட்காருங்கள் என்று அவனை டைனிங் சேர் ஒன்றை இழுத்துப் போட்டுவிட்டு அமரவைத்து அதன்பின் சற்று பக்கத்தில் இருக்கும் பிரிட்ஜில் இருந்த பழங்களில் ஆரஞ்சு பழம் ஒன்றை உரித்து அவனிடம் தந்து விட்டு இரு ஆரஞ்சு பழங்களுடன் சமையல் அறையை அடைந்தாள். அட பழம் இங்கே தான் இருக்கிறது நமது கண்ணுக்குத் தெரியலையே என்று சத்தமாக யோசித்தவாறு அந்த பிரிஜ்ஜை ஆராய்ந்தான்.