காதலா ??? பாவம்... அவ ரொம்ப சின்ன பொண்ணு....
நீங்களா எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு அவளையும் கஷ்டப்படுத்தி நீங்களும் கஷ்டப்படாதிங்க....
அண்ணி... நீங்க சொல்றது எல்லாம் உண்மையா???? என்ற க்ரிஷ்யின் கேள்வி அவனது மனதின் வலியை கீதாவிற்கும் ரிஷிக்கும் புரிந்தது.
ஆம் என்பது போல கீதா தலை அசைத்தாள்.
இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு.... அண்ணி நான் நித்யாகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசணும் ப்ளீஸ்....
கீதா, ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன் ரிஷி... போடா போய் பேசு என்றான்.
க்ரிஷ்... கீதாவை பார்த்தான். அண்ணி என்னால இனி எந்த பிரச்சனையும் நித்யாக்கு வராது. என்னை நம்புங்க ப்ளீஸ். .
ஐயோ... தம்பி நான் உங்களை நம்புறேன்... இப்பதான், நான் நித்யாவை சமாதானம் படுத்திட்டு தூங்க சொல்லிட்டு வந்தேன். அதான், யோசிச்சேன்.
அவளால... கண்டிப்பா தூங்க முடியாது அண்ணி..... என்கிட்ட பேசாம அவளால தூங்க முடியாது என்று உறுதியுடன் கூறினான்.
ரிஷி, க்ரிஷ்யின் தோளில் கை வைத்தான். நீ போடா போய் பேசு நாங்க பத்து நிமிஷம் கழிச்சு வரோம் போ என்றான்.
க்ரிஷுயும் அமைதியாக இறங்கி நித்யா இருந்த அறைக்கு சென்றான்.
கீதா, ரிஷியிடம் என் மீது கோபமா என்பது போல பார்வை பார்த்தாள்.
இல்லை... என்பது போல அவளை தனது மார்பில் ரிஷி சாய்த்து கொண்டான்.
க்ரிஷ் கேட்ட பத்து நிமிடம் முடிந்ததும், ரிஷியும் கீதாவை கூட்டி கொண்டு நித்யாவை பார்க்க சென்றான்.
ரிஷியை பார்த்ததும் க்ரிஷ், அண்ணா அண்ணி சொன்னதுதான் சரி...நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்....
என்ன இருந்தாலும் நான் அப்படி நடந்து இருக்க கூடாது... எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க... (எல்லாரும் என்பதில் அழுத்தம் கொடுத்து கூறினான்).
அவன் கூறியது எல்லாத்தையும் கேட்டு கொண்டு நித்யா தரையை பார்த்தபடி கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.
க்ரிஷ் மன்னிப்பு கேட்கவும் கீதாவிற்கு கஷ்டமாக இருந்தது.
ரிஷி, ஏதும் பேசாமல் க்ரிஷியையும் நித்யாவையும் பார்த்து கொண்டு இருந்தான்.
சரி விடுங்க தம்பி... இதோட இந்த பேச்சை விட்டுடலாம். என்று கீதா கூறினாள்.
சரி, வாங்க சாப்பிட போலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் மாமாவும் நாளைக்கு குல தெய்வ கோயிலுக்கு போறதுக்கான வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்துடுவாங்க... நாம அங்க இருக்கணும் வாங்க என்று அனைவரையும் கூப்பிட்டாள்.
ஒரு நிமிஷம் அண்ணி... நித்யாகிட்ட நான் ஒரு கேள்வி கேட்கணும் என்றான்.
மறுபடியும் முதல்ல இருந்தா என்பது போல ரிஷியும் கீதாவும் பார்த்தனர்.
அவர்களது, பார்வையை உணர்ந்து கொண்டவன்.... அண்ணா, இனி அவங்ககிட்ட என்னைப்பற்றி கேட்க ஏதும் இல்லை.
இப்ப நான் பேச போறது உங்க ரெண்டு பேர் பத்தின விஷயம்... Actually, இதை பற்றி கேட்க தான் நான் மொட்டை மாடிக்கு போனேன்.
நித்யாவிற்கோ பயம் அதிகம் ஆனது. அவன் எதை பற்றி கேட்க வருகிறான்.அவளது இதய துடிப்பு அவளுக்கேயே கேட்டது.
மார்னிங்... உங்க நிச்சயதார்த்தம் நடந்துட்டு இருக்கும் போது... நித்யா யார்கிட்டையோ உங்களையும் அண்ணியையும் கண்டிப்பா பிரிச்சுடுறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க ... அதை நான் கேட்டேன்.
யார் அவங்க? எதுக்கு இவங்க உங்க ரெண்டு பேரையும் பிரிக்க நினைக்குறாங்க?... எனக்கு இப்ப தெரிஞ்சாகணும். என்று கோபத்துடன் கூறினான்.
ரிஷியும் கீதாவும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர்.
நித்யா, க்ரிஷ் சொல்றது உண்மையா ????? என்று ரிஷி கேட்டான்.
தனது குட்டு வெளிப்பட்டு விட்டதை உணர்ந்த நித்யா கட்டிலில் இருந்து எழுந்த நின்று ஆம் என்பது போல தலை ஆட்டினாள்.
நித்யா, நீயா என்னையும் ரிஷியையும் பிரிக்க பாக்குறா ... என்று நம்ப முடியமால் கீதா கேட்டாள் .
(Thank You Chillzee Team and Viewers) & (Next week Nithiyavoda FB Pakalam)
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}