(Reading time: 21 - 42 minutes)

செய்வது? வெறுப்பாக உள்ளது.

ம்ம்ம்ம் பார்க்கிங் ஏரியா தனியா இருந்தாலும் அங்க அப்படி தான் இறுக்கு என்று இவள் சொல்ல, அது அவர்கள் மூன்றே வழி தானே வச்சிருக்காங்க அதில் இடத்துப்பக்கம் வரும் வழியில் ஒப்பன் இருந்தால் மக்கலால் பெரிய சாலையை விரைந்த அடையலாம். கவனக் குறைவின் விபத்துகளைத் தவிர்க்க அவர்கள் அந்த பக்கத்தை எவ்லோ பிரச்சனையிலும் திரக்காமல் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு இவர்கள் சாலை யில் அவர்கள் இடத்திற்கு வரும் வழியில் சின்ன சுவர் அமைக்கலாம் அதுவும் ஒரு 2 1\2 அடி உயரத்தில் இருந்தாலே போதும். என்று அவன் சொல்வதை உள்வாங்கினாள் முழுமையான மகிழ்ச்சியுடன்.

என்னங்க என்று அவள் பேட்சின் பாதியில் அழைக்க, எண்ணமா என்று அவன் வண்டியை ஓரமாக நிருத்தி கேட்க, இங்க பக்கத்தில் இறுக்கு சிவன் கோவிலில் நிருத்த முடியுமா என்று அவள் கேட்க அடுத்த நிமிடம் கோவிலில் இருந்தனர் இருவற்றும். இவன் வண்டியை விட்டு வருவதற்குமுன் அர்ச்சனை தட்டை வங்கிவிடலாம் என்று சென்றவள் அங்கிருந்து முழிப்பதைப் பார்த்தவன். அவள் அருகில் வந்து என்னடா என்று கேட்க, தம்பி உன் பொண்டாட்டி தட்டை வாங்கிட்டு இப்ப வேண்டாம் என்று திரும்ப கொடுக்குதுபா என்று அவனிடம் புகார் வாசித்தார் அங்குப் பூஜை சாமாண் விற்ற பாட்டி.

அவள் கையை பார்த்தவன், நான் தான் வந்துகொண்டு இருந்தேன்லமா அதுக்குள்ள காணோமேனு வாங்கின தட்டை கூட கொடுத்துட்டு வந்து பார்கனுமா என்று அவளைக் கேட்டவன், இந்தாங்க பாட்டி என்று அவன் பர்சில் இருந்து பணத்தை கொடுத்து அவள் கையில் பூஜை பொருட்களை வாங்கி கொடுத்தான். நல்ல பெண்னம்மா நீ. ஒன் வீட்டுக்காரரை விட்டு 5நிமிடம் இருக்கமாட்டியா? தீர்க சுமங்கலியா 100 வருஷம் அந்த ஈஷ்வரனும் பார்வதியும் போல வாழவேண்டும் என்று வாழ்த்தினார். அவளுக்கு வேண்டுமானால் அவளே அந்தப் பாட்டி கூருவதை மறுத்துச் சொல்லட்டு நான் சொல் முடியாது என்று அவனும் அவர் அமைதியாக இருக்கவேண்டும் இறைவா, ன் இடத்துக்கு வந்து எதுவும் நெகட்டிவ்வாய் சொல்லக் கூடாது என்று அவள் இந்த ஈஷ்வரனால் அந்த  ஈஷ்வரனிடம் வேண்டினாள்.

இவள் அமைதியாக இருந்தது அவனுக்கும், அவன் அமைதியாக இருந்தது இவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

உள்ளே சென்று இவர்களின் தாத்தா பாட்டியின் பெயரில் அன்னதானம் வழங்கப் பட்டது. இன்று நாள் முழுவதும் நடத்தப்பட்டதற்கான அடையாளமாய் சாப்பிட்ட இலைகளை கூடைகூடைகலாய் வாரி சென்றனர். அவர்கள் இருந்த மனநிலையில் இருவரும் ஐயர் அளித்த சாமி மாலையை தங்கள் கழுத்தில் போட்டு பிரகாரத்தை சுற்றி வந்ததும், இவன் மட்டுமல்ல அவள் கூட சொல்லாமல் ஈஷ்வரின் பெயர் ராசி மற்றும் நட்சத்திரம் அனைத்தும் கூறி பூஜை நடந்தது. அவன் கவனித்திருந்தால் தான் அவன் என்றோ உருப்பட்டிருப்பானே.

அங்கிருந்து கோவில் ஆட்களை பிராசாதத்தை வீட்டில் சேர்க்கும்படி கூறி இவர்கள் ஹோட்டலுக்கு கிளம்பினர். பாரதீஸ் இன் அருகில் வரும் வரை தெரியாத ஏதோ ஒன்று பெளவ்விக்கு அத்தன்னுள் என்டர் ஆனதும் தெரிந்தது. ஹோட்டலின் செக்யூரிட்டி இவர்களை பார்ப்பதில், வண்டியை விடும் இடத்தில் டோக்கன் போடுபவர், கதவை திறப்பவர் என்று இவர்களின் பார்வையை கண்டவள் ஈஷ்வரை விட்டு தல்லி நடக்க எண்ணி சற்று எட்டி காலை வைக்கக் காலில் ஏதோ தட்டி விழப்பார்தாள்.

நொடிப் பொழுதில் இவளை நெருங்கியவன் அவள் வலக்கையை பிடித்து இடப்புறமாய் அவன் கையை அவள் இடுப்பைச் சுற்றி போட்டவன் அவள் விழாதபடி தன்னுடன் இறுக்கினான். பெளவ்வி வந்து விட்டாள் என்ற தகவலை அறிந்த நண்பர்கூட்டம் ஆவள்லானது. ஒரு வருடம் கழித்து சந்திக்கப் போகும் தோழின் வருகைக்காஅறை நுழைவ்வுப் பகுதியிலேயே நின்றபடி அரட்டையடித்தபடி இருந்தவர்கள்,  வழக்கம் போல் சாதாரண ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் அல்லது சுட்டியில் பௌவ்வியை எதிர்பார்க்க அவளோ ஆரம்பத்தில் அவள் கல்லூரியில் சேர்ந்த அந்த நேரத்தில் இருந்ததபை் போல் பலீற் டால் அடிக்கும் பௌவ்வியாக, காண்பவர் அனைவருமே மயங்கும் வன்னம் அசத்தலாகப் புடவையும், பூவும் அழகிய ஓவியமாய்.

அவள் அருகில் நிற்பவனோ இவள் புடவையின் நிறத்திலேயே சட்டை அணிந்த நான் அனைத்துப் பெண்கள் மனதிலும் தனக்கு எப்படிப் பட்ட  ஆண் காதலனானாக, கணவனாக வரவேண்டும் என்று நினைப்பற்ளோ அத்தர்க்கான யுனீக் பீஸ் டிஸைன்  என்பவன் போல் அப்படி ஒரு அழகு. அவள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி அனைத்தையும் ஓரம் கட்டி இதுவே எனது அழகின் உட்சம் என்ற டமாரம் இட்டது. இவர்களின் ஜோடிப் பொருத்தமோ எந்த ஜோடிகளையும் எங்களுடன் ஒப்பிடாதே என்று மிரட்டும் வன்னம் இருந்தது.

லக்ஸ் மற்றும் ரஞ்சித் வாயை திறந்தவர்கள் திறந்தவர்களாக்கவே இருந்தனர், ஈஷ்வர் அவள் இடுப்பில் கைபோட்டு அழைத்து வருவதைக் கண்டவர்கள் அனைவரின் கண்களும் 4 சைஸ் பெரிதாகி பின் அதன் நிலைக்கு வந்தது. இவர்களை யாரும் நெருங்கக் கூட எத்தனிக்காமல் உறைந்துபோயிருக்க, பௌவ் அத்தை என்று மழலைக் கூட்டம் ஒன்று ஈஷ்வரையும் அவளையும் சூழ்ந்தது. 12 முதல் 18 குழந்தைகள் இருப்பர் கணையா எனும் 3 வயது பெண்ணும் கார்த்திக் என்னும் 4 1/2 வயது ஆண் குழந்தையும் ஒரே நேரத்தில் இவளிடம் ஓடி வர குனிந்து அவர்களைக் கட்டிக்கொண்டு அப்படியே தூக்கிக் கொண்டாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.