(Reading time: 21 - 42 minutes)

அதைப் பார்த்திருந்த ஈஷ்வர்கோ மனதில் எந்நற்ற கற்பனை அலைகள். அவள் தூக்க கஷ்டப்படுவதைப் பார்த்து அவளிடம் இருந்த குழந்தையிடம் இவன் கை நீட்ட அணையா இவனிடம் தாவினாள். அந்த நேரத்திலும் அவனை ரசித்தாள் பௌவ்வி.  அதில் வயதில் மூத்தவளான 7 வயது சஷ்டி இவளை அழைக்க அவர்களின் நடுவில் மண்டியிட்டாள்,  அனைவரையும் கொஞ்சி மகிழ்ந்து முத்தத்தை லாரி லாரியா வாரினாள். அவளும் அல்லீஅல்லீ வழங்கவும் செய்தாள். தரும்பவும் வயிற்றெரிச்சல் ஆரம்பம் இவனுக்கு.

இவனையும் அவர்களிடம் ஈஷூமாமா என்று அரிமுகப்படலம் நடந்து அவனுக்கும் பாதி லாரி முத்தத்தை பாற்சல் வாங்கிக் கொடுத்தாள். நண்பர் கூட்டம் ஆர்ப்பரிக்க ரோஜா கூட்டத்தின் நடுவில் இருக்கும் தேவதையாய் தன்னவள். அவள் முகத்தின் பொலிவு வெட்கத்தையும் சேர்த்துக் கொண்டதோ ? அவள் அழகிய தேவதையாய் தெரிந்தாள். உள்ளே இருந்து வந்த கனியும் கமலேஷ்ஷும் இவர்கள் இருவரும் கையிலும் அருகிலுமாய் குழந்தைகளுடன் நிற்பதை பார்த்து மனம் குளிர்ந்தனர். எனங்க என்று கனி ஆரம்பிக்கும் முன் அந்தக் கடவுள் கையில் தான் இறுக்கு மொழிமா அவர் பாத்துக்குவார். எதற்கும் இவர்கள் வீட்டுக்கு வந்ததும் சுற்றி போட்டுடு.

ரஞ்சு ஈஷ்வர் அருகில் வர அவனுடன் அவனின் நண்பர்களும் வந்தனர். ஈஷ்வர்க்கு அனைவரையு அறிமுகப்படுத்தியவன் இவனை பௌவ்விக்கு மாமன் மகனாகவே அறிமுகப்படுத்தப் பட்டான். அங்கு வந்திருந்த அனைவரும் நாட்டல் எங்கெங்கோ வாழ்பவர்கள். இந்த ஒரே பார்ட்டிக்காக வந்திருந்தனர். பல லட்சம் கோடிகளை பெரிதாகப் பார்க்காமல் தோழமையை மட்டுமே முக்கியமாய் கொண்டு வந்திருந்தனர்.

பார்த்தவனுக்கோ., என் நண்பர்களுடன் கடைசியாக என்று நான் போனில் கூட எப்பாேது பேசினேன் ரிலாக்ஸ்சாக என்று யோசித்தான். இங்கு இருப்பவர்களில் அனைவரும் ஒரே மேஜர் கூட அல்ல மருத்துவர் இன்ஜீனியர் என்று பல தரப்பட்ட மக்கள். எனவே இவர்கள் பள்ளி தோழர்கள் என்று மனதில் நினைத்து வியந்தான். கேலிபோர்னியாவில் முக்கிய தொழிலதிபராக இருக்கும் ஒருவன் ஐஸ்க்ரீம்முக்காக சண்டையிடுகிறான். அவரவர்கள் அவர்களின் இணையுடன் வந்திருக்கின்றனர், ஆனால் யாருமே ஒதுங்கி நிற்காமல் இனைந்து பழகி கிண்டல் கேலியா உற்சாகம் பொங்கும் இடமாக இருந்தது. எனவே இது இவர்களுக்குப் புதிதல்ல அனைவரையும் அனைவரும் பரிச்சியம் தான் போலும் என்று எண்ணிக் கொண்டான்.

 இவனையும் யாரும் தனியாக விட்டு விடவில்லை, அதிலும் ஒரு சிலர்  இவனைப் பற்றி அக்கு வேறா ஆணிவேராக விசிரித்தனர். ரஞ்சு அவனைப் பார்த்து பாவப்பட்டு டேய் ராகுல் ஏன் அவரை இப்படி வருக்கர விட்ருடா பாவம் என்று அவனுக்குச் சிபாரிசு செய்து காப்பாற்றினான். மிகவும் சன்னக் குரலில் அவன் பௌவ்வி பின்னடியே அலையோ அலைனு அலஞ்சான், எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லனு சொல்லிட்டா, ஆனாலும் 4 வருஷமா காத்துட்டு இருந்தான். உங்களிடம்  பேசின பலர் பௌவ்வி மேல் ஒன் சைட் லவ்வோட இருந்தவர்கள், சிலர் அவளை தன் சகோதரியா பாசம் வச்சவங்க என்று அவன் மறுபுறம் லக்ஸ் இதைக் கூர, கேட்ட ஈஷ்வர்க்கோ   ம்ம்ம்ம்ம்!!!!! எவ்லோ பேரடி இப்படி பித்து பிடித்து அலைய வச்ச என்று வெலியேவே கூரிவிட்டான் மனினுல் கூறுவதாய் எண்ணி.

அப்போது தான் இவனிடம் பேசிய சாரி திருத்தம் இவனைப் பேட்சால் வாட்டிய ராகுல் பௌவ்வின் அருகில் ஜூஸ் ம்லர்ருடன் நெருங்கினான். அடபாவி என் பொண்டாட்டியை நான் இருக்கப்பவே கரக்ட் பண்ணப் பார்க்கிறாயா என்று அருகில் வந்த பேரர் என்ன கொண்டு வருகிறான் என்று கூட பாராமல் தட்டில் இருந்த டம்ளரை எடுத்தக்கொண்டு அவர்களை நெருங்கினான். அவளை யேதோ கேட்டு அவளை வற்புறுத்துகிறானோ என்று பார்த்தால், என்ன தான் ரிஜக்ட் பண்ணினாய் என்றால் என் ஜூசையுமா என்று கெஞ்சுக்கொண்டல்லவா இருக்கிறான் பாவம் இந்த ராகுல் என்று மனதினுள் வருந்தினான்.

 இவன் தலையெழுத்தோ இவனைப் பார்த்து கை மட்டுமல்ல கால், கண் மூக்கு என்று அனைத்தையுமே கொட்டி சிரி்தது.(பாவம் தான் நம்ப ஈஷூ, ராகுல் பௌவ்வியிடம் காதலை சொல்கிறேன் என்று அவள் கையை பிடிக்க அவள் இவனை புரட்டிப் போட்டு அடித்ததில் அவன் பயந்து போய் கல்லூரிக்கு வறாமல் ஒரு செமஸ்டரேயே எழுதவில்லை என்பதும். அவன் தாய் கேட்டுக் கொண்டதின் பெயரால் அவளே பர்சனலாக வீட்டுக்கே போய் அவன் பயத்தை தெளிவித்து, நண்பர்களாக இருந்தால்  கூட எங்களுடன் இருக்லாம் என்று புரிய வைத்து எக்சாம் எழுதவைத்தாள். முக்கியக்குரிப்பு ராகுல் சஞ்சையின் சினியர் அதாவது இவளுக்கு சூப்பர் சீனியர். இவள் முதல்லாண்டில் சேர்ந்த அன்றே அரும்பிய காதல். இறுதியாண்டு என்பதால் காலம் தாழ்த்தாமல் அவள் சேர்ந்த அடுத்த வாரமே காதலைக் கூரிவிட்டு அடியும் வாங்கிக் கொண்டான்.) இந்தக் கதை கல்லூரியில் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் தானே பலர் அவளை நெருங்கவே பயந்தது.

ஈஷ்வரின் அன்னைக்கும் தந்தைக்கும் கூட ஏதேதோ கும்பல்களுடன் ஐக்கியம் ஆகிவிட்டனர். அன்னை அவ்வளவு சத்தமாக வாய் விட்டுச் சிரிப்பார் என்றே இன்றுதான் தெரிந்து கொண்டான் அவன். குழந்தைகளை அடக்காமல் இஷ்டம்போல் விலையட விட்டு அவர்களை பார்த்துக்கொள்ள 8போர் இருந்தனர். சோறு ஊட்ட, துணிகளை மாற்ற மற்ற வேளைகளுக்கு தனித் தனியாக ஆட்கள் இருந்தனர்.

பெரியவர்களை விட இவர்களின் ஐட்டங்லே அங்கு அதிகமாக வைக்கப்பட்டு இருந்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.