பார்க்க பட்டாளே. அவர் மகளிடம் கொண்ட பாசம் எப்படி என்றால் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை மகள் பெயராலே நிறுவனம் நடத்தப்படுவதும் அதை அவள் வரவிலேயே வைத்து வருகிறார்.
வள்ளி பௌவ்டா என்று அவளை மெல்ல அனைத்து கொண்டார். அவள் கண்கள் கலங்கிக் கலங்கி அதை அவள் பிறர் அரியாமல் மறைப்பதையும், முகத்தில் அழகிய புன்னகையை தவழவிட்டபடியே, அவள் கண்னழகு, இதழ் அழகு, முக்கின் அழகு, காதுமடலின் மென்மை.... ஐயோ... ஈஷ்வரா.... என்றது மனம். சே..... என் பேர என்னையே சொல்லி புலம்ப வச்சிடா ராட்சசி என்றான் அவன் மனதில் அவளைக் கொஞ்சிக்கொண்டு.
அக்காாாா.... என்று ஒரு மிண்னல் அனைவரையும் வேகமாய் கடந்து பௌவை அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஓடி வந்து கட்டிக் கொண்டாள் நிவி. அனைவருக்கும் ஆச்சரியம். அக்காளைக் கட்டி அனைத்து முத்த மழை பொழிந்தாள். அவளைக் கண்ட பௌஷாலிக்கோ ஆனந்தமாக இருந்தது. விலையாட சென்ற குழந்தை ஆட்டம் முடிந்ததும் அன்னையை தேடி ஓடி வரும் குழந்தையின் செயல் தான் நினைவுக்கு வந்தது இதைப்பார்பவர்களுக்கு. கொஞ்சல்களை ரசிக்கும் அன்னையாய் அவளின் முத்தங்களை முழு ஆனந்தத்துடன் பெற்றுக் கொண்டாள் அன்னையாய் மாறிய அக்காள். காரைப் பார்க் செய்து பெட்டிகளை இறக்கியவன் உதவிக்கு வந்தவர்களிடம் அனைத்தையும் தந்து பின் உள்ளே வந்தால் நிவி பௌவ்வை அணைத்தபடி கொஞ்சுவதைத் தான் கண்டான். இவர்கள் வந்ததை ஈஈஷ்வர் நிவி பௌவை அணைத்ததும் தான் கவனித்தான். முதலில் சிரித்தபடி கண்டவன் சற்று வயிறு எரிச்சலுடன் தன் மனதையும் முகத்தையும் வேற்றுப்பக்கம் திருப்பினான். நிவி அவள் கண்ணத்தில் தந்த முத்தங்கள் உபயம்.
என்ன கொஞ்ச சொன்னால் மட்டு அநியாயத்துக்கு வெட்கப்படுவாள் என்று மனதில் சொல்லி சிரித்தான் நக்ஷ் . ஆனால் அவளை ரசிக்கவும் மறக்கவில்லையவன். அக்கா நீ நல்லா இருக்கத் தானே... அவர் கூட இனி நான் எங்கயும் போகமாட்டேன்கா என்று அவள் சொல்லி அழுவதைப் பார்த்தவன் பேய் முழி முழிக்கச் சரியாக அதே நேரம் பௌவ் நிவியின் தலையில் தட்டி ஏய் இதைமட்டும் நக்ஷ் கேட்டார் பேய் முழி முழிப்பார் என்று சொல்லி முடிக்கும் முன் மிகுந்த சத்தத்துடன் கைதட்டி சிரித்தான் ஈஷ்வர்.
அனைவரும் அவனைப் பார்த்ததும் என்ன என்ற கேள்வியை தாங்கிய முகத்தைக் கண்டவன் கண்ணில் நீர் வரச் சிரித்தான் நிக்கியை காண்பித்து.... நிவி திருத்திரு முழியுடன் அவனையும் ஈஷ்வரையும் பார்க்க, குடும்பத்தில் எஞ்சிய சிலறும் அவனை நெருங்கினர். அண்ணனைக் கண்ட நக்ஷ் அவனைக் கண்ட ஆனந்தத்துடன் நெருங்க நினைத்தால் தன்னையே காண்பித்து