நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை ந
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
ராணி , ப்ரித்விராஜ் இருவரின் எண்ணமும் தாங்கள் ஒன்று சேரும் நாள் நோக்கிப் பயணிக்க, அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லையே என்று அந்த இயற்கை வருந்தியது.
இதோடு கிருத்திகா முழிக்க, இந்த முறை அவளின் கனவில் வந்தக் காட்சிகளில் அவள் மனம் சந்தோஷம் அடைந்தது. அவளின் மைன்ட் வாய்ஸ்
“ஷப்பா . இந்தக் கனவு வர ஸ்பீட் பார்த்தா நான் கிழவி ஆனாக் கூட இவங்க லவ் சொல்ல மாட்டங்கன்னு நினைச்சேன். ஒரு வழியா பிரின்ஸ்சம், பிரின்சஸ்சும் அவங்க லவ் சொல்லிட்டாங்க. ச்சே. இத்தனை நாளா இவங்க ப்ரொபோஸ் பண்றதுக்கு. இதே நம்ம தமிழ் பட ஹீரோ கிட்டே விட்டா இதுக்குள்ளே மூணு சாங் பாரின் லொகேஷன்லே கம்போஸ் பண்ணிட்டு வந்துருப்பாங்க. ஆனாலும் இதுங்க டார்டாயிஸ் ஸ்லொ பா.” என்று பேசியது.
அதோடு “அது என்ன நறுமுகையே சாங் நடுவில் டூயட் பாடினாங்க. கனவோ 17th செஞ்சுரிலே இருக்கு. சாங் 20th செஞ்சுரியில் கம்போஸ் பண்ணது. ஆனால் கூட எவ்ளோ அழகா மேட்ச் ஆகி இருக்குப் பாரேன். நம்ம ஆஸ்கார் நாயகன் திறமை அப்படி” என்று நடுவில் தன் மனதோடு பேசிக் கொண்டாள்.
வழக்கம் போல் அவர்கள் அன்றும் சுற்றிப் பார்க்கக் கிளம்பவும், முதலில் மகாராணா சிலைக்கு