செல்லலாம் என்று கூறினான் ப்ரித்விராஜ். காலையில் கிருத்திகாவல் அவனைப் பார்க்க முடியவில்லை. கனவும், நனவுமாக அவள் பயணித்ததில் தாமதமாகத் தான் விழித்தாள். மற்றவர்கள் ரெடி ஆக ஆரம்பித்து இருக்கவும், தானும் வேகமாக குளித்து விட்டு ரெடி ஆனாள்.
பிரேக் பாஸ்ட் போகும்போதும் ப்ரித்வியைக் காணவில்லை. பஸ்சில் ஏறவும் தான் அவனைக் கண்டாள். அப்போது தான் அவனிடத்தில் பேச வேண்டும் என்ற நினைவு வர, அவனைப் பார்த்தாள். அவனோ அவளைக் கண்டு கொள்ளவில்லை.
மோட்டி மகரி என்றழைக்கப்படும் சிறு குன்றின் உச்சியில் மகாராணா பிரதாப்பின் வெண்கலத்திலான சிலை நிறுவப் பட்டுள்ளது. ராணாவின் பிரியமான குதிரை சேத்தக் மீது அமர்ந்து இருக்கும் அந்த சிலை மக்கள் நிதியால் நிறுவப்பட்டது. அந்த இடத்திற்கு எல்லோரும் பஸ்சில் சென்று இறங்க, கிருத்தியும் இறங்கி சுற்றிப் பார்த்தாள்.
ராணாவின் சிலை அருகே வந்தவள் , மெதுவாக அதைத் தொட்டுப் பார்க்க, அவளுள் ஏதோ ஒரு மாற்றம். அது வெறும் கல்லாக இல்லாமல், அவள் கனவில் வந்த ராணவைப் போலே தெரிந்தது. அந்தக் குதிரை அவளைக் கண்டால் எட்டி நின்று கனைப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியாமல் சுற்றிலும் பார்க்க, அங்கே ஓரிடத்தில் ஏதோ ஒரு மாணவனுக்கு விளக்கிக் கொண்டு இருந்த ப்ரித்விராஜ் அருகில் சென்றாள்.
தொடரும்!