தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா
காலையில் கண் விழித்த தாத்தா கண்ட காட்சி அவர் மனதிர்க்கு மிகவும் இனியதாக இருந்தது. உடலில் இருந்த கொஞ்சம் நஞ்சம் வலியை போக்கும் தன்மை அந்த காட்சிக்கு இருந்தது.
காலையில் தாத்தாவின் அறையினுல் நுழைந்த நர்சை தடுத்த தாத்தா போய் ஒரு அறைமணிநேரம் கழித்து வரும்படி சொல்லி அனப்பினார்.அதையும் மீரி உள்ளே வந்தால் அடி தான் விழும் என்று வருபவர்கள் அனைவரையும் மிரட்டி துரத்தி விட்டார்.
அவரைக்கண்ட யாரும் நம்ப மருத்தனர் அவருக்கு ஆபரேஷன் நடந்தது என்று. அதுவும் 16 மணி நேரம் தான் ஆகிரது என்றால் நம்பவா முடியும்.
தன் எதிரில் இருக்கும் கட்டிலைப் பார்த்து சிரித்து கொண்டே படுத்து விட்டார் அந்த வயதான மனிதர். காலையில் கண் விழித்த பேரன் தாத்தாவின் அறையில் நுழைந்தால் தாத்தா மகிழ்ச்சியோடு எதையோ பாத்துக்கொண்டு இருந்தார். பரமூ ஒரு நிமிடம் அதிர்ந்தாளும் சிரித்து கொண்டே என்ன தாத்தா இப்படி தூங்குராங்க?
அவன் கேட்பதிலும் நியாயம் இருந்தது. தாத்தாவின் அருகில் அமர்ந்திருந்த மனைவியை பார்தவாரு உரங்கியவன் சற்று நேரத்தில் கண்விழித்து பர்க்க அவள் கால்கள் மருத்து விட்டு அதை ஊன கஷ்டபட்டு கொண்டிருப்பதைக் கண்டான்.
என்ன ஆச்சி கால் வலிக்குதா? என்ற குரல் திடீர் என்று கேட்டதும் தூக்கி வாரி போட்டது அவளுக்கு. சற்று நேரத்தில் சகஜமானவள் சத்தம் வந்தது கணவன்னிடம் இருந்து தான் ஆனால் என்ன கேட்டான் தெரியலயே????🙄🙄🙄
திரும்பவும் ஏன் இப்படி முழிக்குறா? ..... கண்ணு ரெண்டும் பெரிசா வச்சிருந்தா அடிகடி இப்படி எதிர இருக்கவங்கள உள்ள விழ வைக்கர பார்வ பாப்பாங்களா ? இல்ல இது இவளோட ஸ்பெஷல் ஆயுதமா?
என்னடி பன்னுது..….. கால் வலிக்குதா? மிரட்டல் தோணியில் கேட்க...
ஆமாம் என்பதாய் தலையாட்டி, இல்லை என்றாள் வாயில் இருந்து வெலிவரா வார்த்தையில்.
இவள...... என்று மனதில் நினைத்தவன் இங்க வா என்று அழைத்து அவன் அருகில் அமர்த்திக் கொண்டான். அவள் கால்களை மெதுவாக தூக்கி அவன் மடி மீது வைத்து மிருதுவாக அமுக்கிவிட கூச்சமாக இருந்தாளு வலிக்கும் கால்களுக்கு சுகமக இருந்தது. ஆனாலும் மருத்தாள் கால்களை தொடுகிறானே என்று. பேசாமல் படுடீ என்று அவன் மிரட்ட அவளும் அப்படியே படுத்து விட்டாள் படுக்கையில்.
என்ன மிருதுவான கால்கள்.. எவ்வளவு அழகான விரல்கள்.... என்ன ஒரு ஒழுகான நகம். அவள் கால்களில் உல்ல மென்மையான ஸ்பரிசத்தை அவன் உணர்ந்தவாரு அவன் பிடித்து விட அவள் அந்த சுகத்திளேயே தூங்கி போனாள். சரியான தூக்கம் இல்லாமல் கார்