ஈஷ்வரின் தந்தை பிறந்த வீடு. ஆம் இது பரணித்தாத்தாவின் பூர்வீக வீடு. பௌவ் பிறந்த நேரத்தில் தான் தாத்தாவிர்கு கிடைத்தது கோர்ட் பிரச்சினைகளுக்கு பின். பௌவ் திருமணம் முடிந்து இங்கு வருவது தான் முறை என்பதால் மட்டும் அல்ல இங்கு வந்தால் அவர்ரின் நண்பர் பரணி மற்றும் தங்கை பாரிஜாதத்தின் ஆத்மா மகிழும் என்பதே முதல் காரணம்.
பௌவ்வின் கண் கலங்க நின்றாள். அவள் வீட்டைப்பார்க்க சிறுவயதில் இவள் ஓடி வந்து விழும் முன்னே பாய்ந்து தூக்கும் தாத்தாவும் , மரத்தில் அமைத்த ஊஞ்சலில் உட்காரவைத்து கதை கூரி ஊட்டிய பாட்டியும் கண்முன்னே வந்தனர். தாத்தா கண் காட்ட ஒரு தட்டை கொண்டுவந்தாள் நிவி பளகைப் போல் எதையோ தூக்கி வந்தான் நக்ஷ்.
தட்டை கணி பிடிக்க அதில் இருந்த மஞ்சளில் கையை வைத்து அந்த கையை செவிற்றில் வைக்க சொன்னார் தாத்தா... பௌவ் கை வைத்த இடத்திர்கு அருகில் ஒரு கை அச்சு கண்ணாடி ப்ரேமுக்குல் இருப்பது தெரிந்தது. ஆம்... அது பாரி பாட்டியுடையது. அவர் திருமணம் முடிந்து வீட்டில் நுழைந்ததும் முதலில் வைத்தது. மங்களத்தின் ஆரம்பம் என்பதாகும் இதன் அர்த்தம். அவள் கை அச்சு அழகாகவும் பாடியின் அச்சை அச்சில் வடித்தது போல் இருந்தது. அதை தொட்டு பார்க்க சென்ற தன் கை வாங்கி அடி யாரிடம் என்று பார்க்க நிமிர்ந்தால் அடித்தது அன்னை.
அலைத்து விடாதே டா என்று மிரட்டியவர் அதை ப்ரேம்மிக்குல் மூடி அழகு பார்தே நகர்ந்தார்.
கையில என்னடா என்று நிக்ஷிடம் கேட்டால் இங்க வந்து நில்லுடா என்று மிரட்டியது கமல் அப்பா.
வாசல் படி அருகில் இருவரையும் நிறுத்தி வீட்டினுள் அவர்களின் முதல் அடியை பல தலைமுறைகள் பேசவேண்டும் என்பதர்காக ஈரமான சிமெண்ட் சிலாப் மீது வைக்க சொன்னார்கள். அது ஒரு சின்ன சிலாப் இருவரும் தங்களின் வளது கால்களை அதில் வைத்தால் அடுத்த அடி வைக்க நகர்வது அதுவம் ஒருவர் மற்றவரைத் தல்லாமல் நகரவே முடியாது.
அமைதியாக வளது கால்களை அதில் வைத்தவன் அடுத்த காலை அவள் நகர்த்த கஷ்டப்படுவதைப் பார்த்தவன் வளது கால் சிலாப் மீதே அழுத்தி பின் தன் இடதுகாலை பின்புறம் அழுத்தி நின்றான். அவள் வளது காளை சிலாப் மீதிருந்து அசைத்ததுமே அவளை அப்படியே தூக்கிக் கொண்டன். யார் முதலில் நகர்வார்கள் யார் விழுவார்கள் என்று பார்த்திருந்த அனைவரும் தங்களின் கையை வைத்தே தத்தம் வாய்கலை மூடிக்கொண்டனர்.
தன்னவளைபூப்போல் தூக்கியவன் அவள் நெளிவதைப்பார்த்து தன்னுடன் சற்று சேர்த்து அனைத்து பின் இரக்கினான் அங்கிருக்கும் சோபாவில். பௌவ்வின் முகம் வெட்கத்தில்