“ஆமாமாம்… ரதன் அந்த குட்டி யானை உங்களை போலவே இருக்கு…”
ஹாங்..! குட்டி யானையா? அவ்வளவு குண்டாகவா இருக்கிறான்..? எப்பவுமே சரியா உடற்பயிற்சிகள் செய்து அவன் ஃபிட்டாகத்தானே இருப்பான்.. என்ன ஒண்ணு… இந்த ஊருக்கு வந்ததில் இருந்து உடற்பயிற்சி செய்ய முடியவில்லை… அதுக்குள்ள குட்டி யானை சைஸுக்கு குண்டாகிட்டானா என்ன?. அவன் யோசிக்கும்போதே…
“அது எப்படி விளையாடுது பாருங்க…”
அவன் அந்த யானை குட்டியை பார்த்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை! கொஞ்சம் கவனித்த பின்புதான் புரிந்தது. அந்த குட்டி யானை அதனுடைய அப்பா யானை சொல்வதைத்தான் கேட்கிறது… அப்பா யானையின் நான்கு கால்களுக்கிடையிலேயே ஓடிக் கொண்டிருந்தது. அப்பா யானையும் அவ்வப்போது அந்த குட்டி யானையை துதிக்கையால் தட்டி தட்டி கன்ட்ரோல் செய்து கொண்டிருந்தது.
அச்சோடா! அவன் அப்பாவுடைய செல்லம் என்பதை கேலி செய்கிறாளா?
“இப்ப என்ன சொல்ல வர்ற… நான் என் அப்பாவை கோண்டு பிடிக்கிறேன் என்கிறாயா?”
“அப்படி இல்லை… அப்பாவும் பையனும் செல்லம் கொஞ்சிக் கொள்கிறார்கள் என்கிறேன்… மாமாவிற்கு உங்களிடம் பிரியமும் கவனமும் அதிகம்”
“யெஸ்.. அப்பா என்பது ஒரு பெருமையான உறவுதானே… அம்மா என்று சொல்லும்போது மனதிற்குள் ஒரு மென்மையான கொஞ்சல் கலந்த அன்பு தோன்றும்… அப்பா என்று நினைக்கும்போது முழு நம்பிக்கையுடன் கம்பீரமான பெருமிதம் தோன்றும். அவர் இருக்கும்போது நமக்கு எந்த ஆபத்தும் வராது என்று தோன்றும்”
“ஆனால் ரதன் என்னுடைய அப்பா என்னை ஏன் காப்பாற்றவில்லை. அவர் எங்களை ஏன் மலையிலிருந்து தூக்கி போட்டார்?. அம்மாவை வேண்டாம் என்று சொல்ல அவருக்கு காரணம் இருந்தது. நாங்கள் என்ன தவறு செய்தோம்…? அவர் என்னை தூக்கி போடும் அந்த நொடிவரை அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தேனே.”
“அது... அப்போது அவர் ரொம்பவும் எமோஷனாலாக இருந்திருக்கலாம். மூளை செயல்படாமல் போயிருக்கும்”
“இல்லை… அப்படி இல்லை! அவர் இந்த சமுதாயத்தின் அடிப்படை சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பம் என்பது ஒரு ஆணின் பெருமைமிகு அடையாளம்… நாங்கள் எல்லாம் உயிருள்ளவர்கள் அல்ல… அவருடைய சொத்து… என்னிடம் சொந்தமாக வீடு இருக்கிறது… நூறு பவுன் நகை வைத்திருக்கிறேன் என்பதுபோல… எனக்கு ரெண்டு குழந்தைகள்