தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 24 - ஜெய்
மதியின் திட்டப்படி சாரங்கனும் பாரதியும் சாந்தியின் வீட்டிற்கு அவளின் அன்னையை பார்க்க சென்றார்கள்....
“வாங்க மேடம்.... எதுக்கு என்னை பார்க்கணும் சொன்னீங்க... கூடவே சாந்தியோட தோழியும் வர சொல்லி இருக்கீங்க....”
“வணக்கம்மா.... இவர் சாரங்கன்... நானும் இவரும்தான் இந்த கேஸ் பார்க்கிறோம்...”
“சொல்லுங்க மேடம்... என்னை எதுக்காக இங்க வர சொன்னீங்க....”
“சாந்தி தன்னோட காதலன் பத்தி எதுவும் உங்கக்கிட்ட சொன்னதில்லைன்னு சொன்னீங்க... உங்களைத் தவிர வேற யார்க்கிட்டயானும் அவங்க நெருங்கி பழகி இருக்காங்களா....”
“என்னம்மா சொல்ற.... என் பொண்ணு காதலிச்சாளா.... ஏம்மா வழக்கை திசை திருப்ப நீங்களே புதுசா எதுனா ஜோடிக்கறீங்களா... இறந்து போன என் பொண்ணு மேல அபாண்டமா பழி போடாதீங்கம்மா....”
“இல்லை ஆன்ட்டி, சாந்தி ஒருத்தனை காதலிச்சா.... அவளே என்கிட்டே சொல்லி இருக்கா.... ரெண்டு மூணு முறை நான் கூட இருக்கும்போதே அவனோட பேசி இருக்கா...”
“என்னால நம்பவே முடியலைம்மா.... வீட்டுக்கு வந்தா புத்தகமும் கையுமாத்தான் அவளை பார்த்திருக்கேன்..... வீட்டுல இருக்கும்போது யாரோடயும் அவ போன் கூட பேசினதில்லைம்மா,,,”
“எப்பவுமே பசங்க காதலை கடைசியா தெரிஞ்சுக்கறவங்க அவங்க பெற்றோராத்தான் இருப்பாங்கம்மா.... சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்... போன் மெசேஜ் பார்த்த வரை அவன் வர சொன்ன இடம் பொதுவா பார்க், பீச் இப்படித்தான் இருக்கு.... அதுலயும் மெரீனா பீச் அப்படின்னு பொதுவாத்தான் இருக்கு... அங்க எங்க அப்படின்னு இல்லை... உங்க முன்னாடி சாந்தி பேசி இருக்காங்கன்னு சொன்னீங்களே.... அப்போ சந்திக்கிற இடம் பத்தி எதாச்சும் பேசி இருக்காங்களா.....”
“இது நடந்து ரொம்ப மாசம் ஆனதால எனக்கு சரியா நியாபகம் வரலை சார்....”
“நல்லா யோசிச்சு பாருங்க.... சின்ன விஷயம் கிடைச்சாக்கூட உபயோகமா இருக்கும்... அப்பறம் சாந்தி எதாச்சும் சோசியல் மீடியால இருந்தாங்களா.... FB, twitter இது மாதிரி....”
“எல்லாத்துலயுமே இருந்தா சார்.... ஆனா பெருசா ஸ்டேட்டஸ் எல்லாம் போட மாட்டா... எப்பவாச்சும் ஸ்கின் கேர் மாதிரி போஸ்ட்ஸ் ஷேர் பண்ணுவா... அவ்வளவுதான்...”
“அவங்க ID தெரியுமா.....”
“ஹ்ம்ம் தெரியும் சார்..... நானும் இன்னும் எங்க கூட படிச்ச சில பேரும் அவ friends லிஸ்ட்ல இருக்கோம்.... அப்பறம் சாந்தி பேசும்போது பீச்ல காந்தி சிலைக்கிட்ட நிக்கறதா ஒரு முறை