(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“ஹேய் அந்த மணி உன்னோட சொந்தக்கார பையனா....”

“ஆமாம்க்கா... எங்க குடும்பத்துலையே அவன் ஒருத்தன்தான் காலேஜ் முடிச்சவன்... ஆனா சரியான வேலை கிடைக்காம மெக்கானிக் ஷெட்ல வேலை செஞ்சுட்டு இருந்தான்... கொலை செய்யுற அளவுலாம் அவனுக்கு தெகிரியம் கிடையாயாதுக்கா...”

“ஹ்ம்ம் ஆனா அந்த பொண்ணு அவன் ரொம்ப தொல்லை கொடுத்ததா சொல்லி இருக்கு முத்து... மிரட்ட வேற செஞ்சிருக்கான்...”

“டாவு முன்னாடி சும்மா உதார் விட்டிருப்பான்க்கா... மத்தபடி சரியான தொடை நடுங்கிப் பய அவன்.... குடும்பத்துல எதுனா பிரச்சனை அப்படின்னாக்கூட அந்த இடத்தை விட்டு ஓடற மொத ஆள் அவனாத்தான் இருப்பான்... அன்னைக்கு காலைல கூட நாங்க எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகறதாத்தான் இருந்துச்சு... கடைசில எங்கம்மாக்கு காய்ச்சல்ன்னு நாங்க போவலை... அவங்க மூணு பேர் மட்டும்தான் போனாங்க...”

“அவங்க  மூணு பெரும் போனாங்கன்னு நீங்க சொல்லி இருக்கலாமே... அந்தப் பையன் அங்க போனதை நிரூபிக்க சாட்சி இல்லாமத்தானே அர்ரெஸ்ட் பண்ணினாங்க....”

“நாங்க எல்லாருமே சொன்னோம் சார்... ஆனா அந்த போலீஸ் கேக்கவே இல்லை.,.. நீங்க சொந்தக்காரங்க அதனால அவனுக்கு சாதகமா பேசறீங்கன்னு சொல்லிட்டாங்க.... எங்க மச்சான்தான் மூணு போரையும் பஸ் ஏத்தி விட்டாரு.... அவர் சொன்னதையே அந்த இன்ஸ்பெக்டர் கேக்கலை... அப்பறம் எங்க நான் சொல்லுறத கேக்க....”

“சொந்தக்காரங்க இல்லாம வேற யாருக்காவது மணி போனது தெரியுமா...”

“அவங்க வீட்டுக்கிட்ட பொட்டிக்கடை வச்சிருக்க அண்ணாச்சிக்கு தெரியும் சார்... பஸ் ஏற முன்னாடி அவர்கிட்டதான் சில்லறை வாங்கி இருக்காங்க... அங்க இருக்கும்போதுதான் எங்கம்மாக்கு எப்படி இருக்குதுன்னு கேட்டு மணி போன் பேசினான்...”

“சூப்பர் தம்பி.... நாங்க ஒரு விஷயத்துக்கு உன்னை பார்க்க வந்தா,,, நீ எங்களுக்கு பல விதத்துல உதவி பண்ணி இருக்க... அத்தனை கேஸ்க்கும் நீ ஒருத்தனே சாட்சி போதும் போல...நீ ஒரே நம்பர்தான் வச்சிருக்கியா... சமீபமா மாத்தி இருக்கியா.....”

“இல்லைங்கய்யா மூணு வருஷமா ஒரே நம்பர்தான்.... அப்பறம் நீங்க கேட்டீங்கன்னு எல்லா விவரமும் சொல்லிட்டேன்... என்னைய எதிலும் மாட்டி விட்டுட மாட்டீங்களே...”

“கண்டிப்பா இல்லை தம்பி உனக்கு ஒரு தொந்தரவும் வராது... கவலையை விடு....”, முத்துவிடம் விடைபெற்று சந்தியாவும், சந்தோஷும் சாரங்கனை  பார்க்க கிளம்பினார்கள்...  அதே நேரத்தில் சக்தியும், மதியும் கல்லூரியின் உள்நுழைந்தார்கள்...  

தொடரும்

Episode # 23

Episode # 25

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.