தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 13 - சசிரேகா
அனைத்து உறவுகளும் உரிமைகளும் கிடைத்துவிட்ட வாழ்வு ஒரு பக்கம், செந்திலின் பிரிவு தந்த வலி ஒரு பக்கம், என இவ்விரண்டும் சீதாவை பாடாய்படுத்தியது. தாங்க முடியாத துக்கத்திற்கு ஆளானாள். அந்த அறையிலேயே அவள் முடங்கியும் போனாள். எவ்வளவு நேரம் அழுதாள் எப்பொழுது உறங்கினாள் என அவளுக்கேத் தெரியவில்லை கண்கள் திறந்த போது பொழுது விடிந்திருந்தது
விடியல் வந்தும் அவள் மனம் வெறிச்சென்று இருந்தது. தனிமை அவளை வாட்டியது கோதையின் நினைவு அவளுக்குள் எழுந்து அவர் தனக்கு துணையாக இருந்தால் நன்றாயிருக்குமே என நினைத்தாள். அழு ... ுக்கள்ல ஒருத்தரான பெரியவர் நம்பியப்பன்நம்பியோட பேத்தி கோதைநம்பியோட பொண்ணு சீதாமகாலட்சுமிநம்பி அந்த வீட்டோட அடுத்த வாரிசா பொறுப்பெடுத்துக்க போறாங்களாம்
This story is now available on Chillzee KiMo.
...