தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 22 - பிந்து வினோத்
ரோஹினி யாருடைய அனுமதிக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. சாரதாவின் போனை வாங்கி அவளுக்கு தெரிந்த அரண்மனை நம்பரை டையல் செய்தாள்.
“வணக்கம் நான் இளவரசி ரோஹினி”
அதை சொன்ன போது அவளுடைய குரலில் இருந்த கம்பீரமும், முகத்தில் தெரிந்த தனிக் களையும் அஜயையும், சாரதாவையும் ஆச்சர்யப்படுத்தியது.
அந்த பக்கம் என்ன சொல்லப் பட்டதோ, ரோஹினி முழுதாக கேட்கவில்லை!
“நானே விலாசம் சொல்கிறேன்”
அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் பெயரை சொல்லி, ஊட்டியையும் குறிப்பிட்டாள்.
“கலாம்மாவை உடனே விடுதலை செய்ய நான் ஆணை இட்டு இருப்பதாக விக்ரமுக்கு செய்தி சொல்லுங்கள்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் ரோஹினி.
அஜய், சாரதா இருவரும் இப்போதும் அங்கேயே தான் இருந்தார்கள்.
“என்னை இங்கே இருந்து அழைத்துப் போக வராங்கம்மா” சுருக்கமாக சாரதாவிற்கு ‘அப்டேட்’ கொடுத்தாள் ரோஹினி.