தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 27 - கண்ணம்மா
உன்னை பிரிந்த மறுகணம்
நான் மரணித்தது போல உணர்ந்தேன்னடா..
அப்போது தான் புரிந்தது போனது
நீயே என் சுவாசம் என்று..
இப்படியெல்லாம் நம்ப பௌவ் கவிதை எல்லாம் எழுதி பீலிங்கோட இருப்பாங்கனு நீங்க நெனச்சிங்கனா !!!♥ ஐ ஆம் வெறி சாரி ... அப்படி எந்த எதிர்வினையும் இல்லங்க அவ கிட்ட.
காலையில் எழுந்ததும் வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி கமல் மாமாவுடன் நடைப்பயிற்சி,
நிவி நக்ஷ் அபரம் மித்ரூவுடன் அரட்டை அடித்தாலும் கணி அம்மாவுடன் கொஞ்சல்.,
காலை காப்பி மருமகள் தருவது அழகு என்றால் அதன் சுவை அமிர்தம் ஆயிற்றே எனவே மாமியார் மானார் இருவரும் அதைத் தவறவிடாமல் ஆஜர் ஆகிவிடுவார்கள்.
வேலைக்கு கிளம்பும் சமயம் மித்ரூ அவளை ஒரு முறைப்புடன் வழி அனுப்புவதும் வழக்கமே...
ஒரு விசையத்தை இந்த வீடு கண்டிப்பா ஒத்துக்கனும், பௌவ் மருமகளா வந்த பின்னாடி எல்லாம் வழக்கமும் மாறி இருக்கிறது.
எப்படியென்றால்?
சேர்ந்தே உண்ணவேண்டும் என்பதே.... கமலுக்கு நிவி வந்ததுமே தோன்றியது வாழ்வில் நாம் சில சந்தோஷங்களை இழந்திருப்பதாக. ஆனால் பௌவ் வந்த பின்பு இன்னும் இன்னும் நன்றாகப் புரிந்து போனது 10 ஆண் பிள்ளைகள் வீட்டிலிருந்தாலும் ஒரே ஒரு பெண் இருப்பதற்கு நிகர் ஆகாது. அதுவும் மகன் என்றுமே மகள் ஆக முடியவில்லையே.... ஆனால் மகள்கள் பல வீட்டில் மகன்களாகவும் இருப்பதை அனைவருமே ஒற்று கொல்லத் தான் வேண்டி இருக்கிறது.
நக்ஷ் நிவியுடன் இந்த ஒரு வருடம் இருந்தாலும் பௌவ் மருமகளாக வந்த இந்த வாரத்தில் மனைவியின் பல சேட்டைகள் தலை தூக்கி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது கணவனுக்கு. அமைதியாக பூனைபோல் இருக்கும் இவளுக்கு வேறு முகம் இருப்பது அவனுக்குத் தான் தெரியுமே... அதுவும் நந்தன் உடன் இருக்கும் சமயம் கண்கூடாகப் பார்த்தும் இருக்கிறான். ஆனால் நிவி ஒரு அக்மார்க் மருமகள். மாமியார் மாமனார் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வாள், மித்ரூவுன் நட்பாகப் பழகுவாள், ஈஷ்வர் இவர்களுடன் இல்லை ஆனால் அவனை மட்டும் அத்தான் என்றே அழைப்பாள். அவன் நலனை வேண்டுவாள். இவனிடம் அன்பானவள்.