தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 28 - கண்ணம்மா
அழகு என்ற வார்த்தைக்கு
புது அர்த்தம் தந்தவளே..
உன் அழகை கண்ட பிறகுதான்
அதில் ஒளிந்துள்ள
அர்த்தத்தை நான் அறிந்தேன்..
இவர்கள் அனைவரும் பௌவ் சிரிப்பதை ரசித்து பார்ப்பதை பார்த்ததும் சுருக் என்று பட்டது ராதாவிற்குக் கல் அடி பட்டாலும் படலாம் கண்ணடி படக் கூடாது என்பதும், ஒருவர் கண் போல் இருக்காதே மற்றவரது. சலி பிடிக்க போகுதுனு சொல்லி பேச்சை மாற்றியவள் அனைவருக்கும் முன்பு அவள் பௌவ்வு பிள்ளைக்குச் சுற்றி போட மிளகாய் கல் உப்பு மண் போண்றவைகளை தயாராக வைத்துக் கொண்டு தயாராக வெய்ட் பண்ண ஒரு 2 மணி நேரத்திற்குப் பின் பௌவ்வை கையில் ஏந்திக் கொண்டு ஈஷ்வர் வந்தான்.
அதற்கு மேல் பொறுக்காமல் அப்படியே நிற்க வைத்துச் சுற்றிப் போட்டு விட்டுத் தான் உள்ளேயே அனுமதித்தாள் ராதா. அக்கா நல்லா தூங்கிடா அக்கா இரவுணவு வேண்டாம் என்று சொல்லிடுங்க அம்மாவிடம். நானும் தூங்க போகிறேன் என்று தன் அறையினுள் வந்தவன் அவளைத் தூக்கிய வாரே ஆல் உயரக் கண்ணாடி முன் வந்து நின்றான். குழந்தை மாதிரி அழகாக குறும்பு சிரிப்புடன் உறங்கும் இந்த மங்கை ஏதோ மேலோக்து ரம்பை மேனகை திலோத்தமை எல்லாம் சொல்வார்களே அவர்களை எல்லாம் இவளிடம் பிட்சை வாங்கும் அளவிற்கு அழகு. நீ அழகு டி என் பொண்டாட்டி என்று கொஞ்ச... தூக்கத்திலேயே அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த கையை இறுக்கினாள். மூட்சி அடைத்து விட்டது அவனுக்கு.
அப்பவும் சரி இப்போதும் சரி நீ என்னை முழுமையாக நம்பி தான் என்னிடம் வந்தாய். ஹோட்டலிலும் நான் உன்னைத் தப்பாக நெருங்க வில்லை இன்று நீ என் மனைவி ஆனாலும் இருவரும் சுய உணர்வோடு விருப்பத்துடன் ஒன்றாக்கலாம் இப்போது இந்த முத்தம் போதும் என்று அவள் நெற்றியில் முத்தம் தர., அதிபா... என்றாள் தூக்கத்தில். குழந்தையாட்டும் தூங்குரனு பார்த்தா நீ குழந்தையே தான் டி.
உங்கள் அப்பா மாதிரி இருக்கா நான் தந்தது... உன்னை அப்படியே படுக்கத் தான் டி வைக்க வந்தேன் பட் ஒரே ஒரு கிஸ் ஓகே...
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் பெண்ணே என்ற வரி ஞாபகம் வந்தது. முழு அர்த்தமும் புரிந்ததும் அவன் இதழில் மிகவும் மென்மையாய் காற்று மலரைத் தீண்டுவது போல் ஒரு முத்தம். பின் அவளைக் கட்டிக் கொண்டு நன்றாக தூங்கிப்போனான். நல்ல தூக்கத்தில் ஒரு உருவம் இதற்கும் அதுக்குமாக பொறுமையா நடந்து எதையோ