செய்தார்கள் என்பதற்கு சாதகமாகத்தான் இருந்தது...
ஆனால் அடுத்த வாரமே மறுபடி ஒரு தற்கொலை.. இந்த முறை தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவனின் கடிதம் எங்களுக்கு கிடைத்தது... நாங்கள் விசாரித்த வரையில் அவனுக்கு அதற்கு முன்னால் பெரியதாக எந்த உபாதையும் வந்ததில்லை... இங்கதான் எங்களுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சுது...
அதே மாதிரி கல்லூரியுடன் இணைத்திருக்கும் இவர்களின் மருத்துமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர் போனதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்... அதுவும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இங்க வந்து அறுவை சிகிச்சை செய்துப்பாங்க... அதன் மீதும் எங்களுக்கு சில குற்றசாட்டுகள் வந்தன...
இவற்றை எல்லாம் தொகுத்து பார்க்கும்போது எங்களுக்கு இதன் பின்னால் மிகப்பெரிய விஷயம் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது... இந்த வழகிற்கென்று தனியாக ஒரு டீம் மறைமுகமாக போட்டு அவர்களின் மூலமாக கடந்த ஒரு வருடமாக கண்காணித்ததில் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் கிடைத்தன....
எங்களுக்கு கிடைத்த தகவல்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இவர்களின் கை உலகளவில் இருப்பது தெரியவந்தது.... அதனால் நேரடியாக இந்த கேஸ் எடுத்தால் ஏதோவொரு விதத்தில் இவர்கள் தப்பி விடுவார்கள்... அதனால் மறைமுகமாக உளவுத்துறையின் உதவியை இதில் நாடினோம்... வழக்கும் அவர்களின் கைக்கு மாறியது... ஆனால் இந்த விஷயம் பிரதமர் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது... உளவுத் துறையிலேயே குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது...
உளவுத்துறையில் பணிபுரியும் அதிகாரி அங்கு கல்லூரியில் விரிவுரையாளராக பணி அமர்த்தப்பட்டார்... எங்களுக்கு தெரிந்த ஒருவர் அங்கு மாணவியாக சேர்க்கப்பட்டார்....
முதலில் மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களை தெரிந்து கொள்ள முடிவெடுத்து அதிலிருந்து ஆரம்பித்தோம்... ஆனால் உளவுப்பிரிவு அதிகாரி சேர்ந்த சில நாட்களில் அடுத்த தற்கொலை....
அப்பொழுதுதான் நாங்கள் ஒரு விஷயத்தை அறிந்து கொண்டோம்... இறப்பவர்கள் எல்லாம் அரசாங்க கோட்டாவில் சேர்ந்தவர்கள்... மிகவும் பின்தங்கிய கிராமத்திலிருந்து வந்தவர்கள்... அதே போல் பெரிதாக பின்புலம் எதுவும் இல்லாதவர்கள்.... அனைத்து தற்கொலைகளிலுமே இந்த ஒற்றுமை இருந்தது... இந்த பாயிண்ட்டில்தான் எங்களின் சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது....
இட ஒதுக்கீட்டில் இருக்கும் சீட்டை விற்பதற்காக ஏன் இவர்கள் இந்த கொலைகளை