" பின்னே ஏன் இப்படி.....?"
" எங்க ஒத்தப் பிள்ளையை நாங்க செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டோமாம்!
அவன் பொறுக்கியாம்! அவனை தம்பின்னு சொல்லிக்கறது, கேவலமாம்! நாங்க எங்கே அவனை காப்பாற்ற, இந்தப் பிசாசுங்களை பணம் செலவழிக்கச் சொல்லிடுவோமோன்னு பயந்து, எங்களை ஒதுக்கிட்டாங்க........"
" இப்படிக்கூட மனுசங்க இருப்பாங்களா?"
" இருக்காங்களே, ஒருத்தரில்லே, நாலுபேர்! அவங்களை பற்றி பேசினாலே, குமட்டுது! பெற்ற வயிற்றிலே பிரண்டையை வைச்சு கட்டிக்கணும்னு ஒரு வசனமே உண்டு!"
" அழாதீங்கம்மா! எனக்கு தெரிந்த ஒரு போலீஸ் கமிஷனர் இருக்காரு, அவர்மூலமா விசாரிக்கிறேன்......"
" நீங்க நல்லா இருக்கணும்யா! கடவுள் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாருய்யா!"
காப்பாளர், தான் சொன்னபடி, விசாரித்து, கிடைத்த தகவலை, மறுநாளே தர்மன் - பிரபா ஜோடிக்கு தெரிவித்தார்.
" ஐயா! நீங்க ரொம்ப கரெக்டா விடுதலையான நாளை சொல்லியிருக்கீங்க, பெற்றவங்களாச்சே! 'பெற்றமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு'னு சொல்வாங்களே, அது சரியாப் போச்சு!
உங்க மகன் சிறையிலிருந்து வெளியே வந்ததும், யாரோ ஒரு பொம்பளை வந்து அவரை கூட்டிக்கிட்டு போயிட்டாங்களாம்......"
" பொம்பளையா? பிரபா! நம்ம பிசாசுங்களிலே ஏதாவது ஒண்ணா இருக்குமோ?"
" முதல்லே, வாயை கழுவுங்க! அவனை நாம சேர்த்துக்கிடுவோமோங்கற பயத்திலேதானே, நம்மளை ஓட்டாண்டியாக்கிட்டு, பிரிஞ்சுபோனாங்க, வேற யாராவதா இருக்கும்? யோசித்துப் பார்ப்போம்!"
" சரிங்க, யோசித்துப் பாருங்க! எப்ப ஏதாவது விவரம் கிடைக்குதோ, சொல்லுங்க, விசாரிக்கிறேன், நான் வரேன்!"
இரவெல்லாம் இருவரும் யோசித்ததில், பலன் கிடைத்தது!
" ஏங்க! ஒருவேளை, அந்தப் பொம்பளையா இருக்குமோ.....?"
" எந்தப் பொம்பளைடீ?"
" நம்ம புள்ளை, அந்த ரௌடியை கொலை பண்ணியபோது, யாரோ ஒருத்தியை அந்த ரௌடி சீரழிச்சிக்கிட்டிருந்தான்னு, ஊரிலே பேசிக்கிட்டாங்களே, அப்படி காப்பாற்றப்பட்டவளா