சொல்லி!
அதற்கு தண்டனையாகத்தான், இன்று, நாங்கள் இங்கே அனாதைகளாக, தவிக்கிறோம்!
பதினெட்டு வருஷம் முடிந்துவிட்டது, அவனை விடுதலை செய்திருப்பார்கள்!
அவன் எங்களைத் தேடி வீட்டுக்கு சென்றிருப்பான்,
இந்த நாலு பிசாசுகளும்தான் அந்த வீட்டை எங்களை ஏமாற்றி, பிடுங்கிக்கொண்டு, வீட்டை விற்று, கிடைத்ததை பங்கிட்டுக் கொண்டுவிட்டார்களே, பாவிகள்!
மகனே! சகாதேவா! எங்களை மன்னிச்சிடுடா! அந்தக் கடவுளை உனக்காக வேண்டிக்கிறதை தவிர, எங்களாலே உனக்கு வேற எந்த பயனும் இல்லேடா!"
"பிரபா! நம்ம சகாதேவனை விடுதலை செய்திருப்பாங்கடீ, பாவம்! குழந்தை, நாம வாழ்ந்த வீட்டுக்குப் போய் தேடியிருப்பான், நம்மை! இப்ப என்னடீ செய்யறது?"
" ஏங்க! இந்த இல்லத்தோட காப்பாளரிடம் பேசிப் பாருங்களேன்........."
" என்னிடம் என்ன பேசணும், நானே வந்துட்டேன், பேசுங்க!"
" ஐயா! எங்க பிள்ளையை விடுதலை செய்திருப்பாங்க, அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு, நாங்க இங்கே இருக்கோம்னு அவனுக்கு தெரிஞ்சா போதும், அவன் ஓடிவந்துடுவான் இங்கே, எங்களைப் பார்க்க!"
" சரி, உங்க மகன் பெயர் என்ன?"
" சகாதேவன்!"
" அட, தர்மர் பெற்ற மகன் பெயர் சகாதேவன், இவரும் ஐவரிலே கடைசியா பிறந்தவனோ?"
வேடிக்கையாகப் பேசியதற்காக மகிழ்ந்துபோய் வாய்விட்டு சிரித்தார்!
" ஆமாம், ஐயா! ஐந்தாவதா, கடைசியா பிறந்தவன்தான்!"
காப்பாளர் அதிசயித்து நின்றார்.
" சரி, எந்த ஊர் சிறையிலிருந்து எப்ப விடுதலை ஆனார்னு தெரியுமா?"
"விவரம் எதுவும் தெரியாதுங்களே.....நாங்க பெற்ற மற்ற நாலு பிசாசுக்கும் தெரிஞ்சிருக்கும்......."
" சரி, அவங்க போன் நம்பர் அல்லது விலாசம் கொடுங்க! விசாரிக்கச் சொல்றேன்....."
" அதெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சா, எங்கேயாவது நாங்க அங்கே வந்துவிடுமோன்னு பயந்துகிட்டு, கொடுக்கலியே! எங்களை இங்க சேர்த்ததுகூட, அக்கம்பக்கத்திலே இருந்த நல்லவங்கதான்!"
" அவ்வளவு மொசமானவங்களா? நீங்க பெற்று வளர்த்தவங்கதானே!"
" பெற்று வளர்த்தது மட்டுமா? லட்சக்கணக்கிலே பணத்தை செலவழித்து, பணக்கார மாப்பிள்ளையா பார்த்து, கட்டிக் கொடுத்தோமே......."